search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நேர்மறை ஆற்றலை உருவாக்கும் கடிகார வாஸ்து
    X

    நேர்மறை ஆற்றலை உருவாக்கும் கடிகார வாஸ்து

    • கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது.
    • பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * காலம் பொன்னானது என்பதற்கு ஏற்ப அனைத்து வீடுகளிலும் கடிகாரம் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. மரத்தால் ஆன சாவி கொண்டு இயங்கும் மணியடிக்கும் பெரிய சுவர் கடிகாரங்கள் பண்டைய காலத்தில் வீடுகளில் உபயோகப்படுத்தப்பட்டது. நேரத்தை குறிக்கும் வண்ணம் மணி சத்தம் கேட்கும்.

    * அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு சத்தமும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எண்ணிக்கையின் நேரத்துக்கு ஏற்ப எண்ணிக்கையில் சத்தமும் கேட்கும் மரத்தினாலான பெரிய கூண்டு கடிகார வாஸ்து பிரகாரம் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

    * வாஸ்து என்பது இன்று அனைவரது வாழ்க்கையிலும் அனைத்து இடங்களிலும் பொருள்களிலும் மிக முக்கியமானதாக உள்ளது. கடிகாரத்திற்கும் வாஸ்து உள்ளது. எந்த கடிகாரம் எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை வாஸ்து பரிகாரம் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றலை உருவாக்குவதுடன் வீட்டில் நல்ல மாற்றங்களையும் தருகிறது.

    * வீட்டு கதவு முன்னால் கடிகாரத்தை தொங்கவிடுதல் கூடாது. வீட்டுக்குள்ளே வீட்டின் அறைகளுக்கு ஏற்றவாறு மரத்தாலான கடிகாரங்களை உபயோகிப்பது மிகவும் நல்லது. அலங்கார கண்ணாடியாலான அலங்கார கடிகாரங்களையும் உபயோகிக்கலாம்.

    Next Story
    ×