செய்திகள்

மலேசியாவில் தீவிரவாத தடுப்பு சோதனை: 400 பேர் கைது

Published On 2017-08-08 05:59 GMT   |   Update On 2017-08-08 05:59 GMT
தீவிரவாத தடுப்பு சோதனையில் ஈடுபட்ட மலேசியா போலீசார் 400-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
கோலாலம்பூர்:

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தீவிரவாத தடுப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து போலி பாஸ்போர்ட் மற்றும் போலி குடியுரிமை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது.
Tags:    

Similar News