என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.
- தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் மோடி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? என்று அமித் ஷா கேட்கிறார்.
* தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? டெல்லி ஆள வேண்டுமா? என்பது தான் சவால்.
* அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் டெல்லி தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் நிலை ஏற்படும்.
* ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் இ.பி.எஸ். தலைமையில் பா.ஜ.க. PROXY ஆட்சி நடைபெற்றது.
* தி.மு.க. ஆட்சியில் 4000 கோவில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இவ்வளவு கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதா?
* உண்மையான பக்தர்கள் தி.மு.க. அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
* மக்கள் எப்போதும் தி.மு.க. அரசின் பக்கம் தான் இருக்கிறார்கள். நாங்கள் தான் மீண்டும் வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.
- பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஸ்ரீலீலா ஈடுபட்டுள்ளார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றது. அப்போது அஜித்தை சந்தித்த நடிகை ஸ்ரீலீலா அவருடன் செல்பி எடுத்து கொண்டார்.
இந்நிலையில் பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலீலா நடிகர் அஜித்குமாரின் குறித்து பேசியுள்ளார்.
நேர்காணலில் பேசிய ஸ்ரீலீலா, "நான் அஜித்குமாரின் வெறித்தனமான ரசிகை. அவர் அற்புதமான மனிதர். எனக்கும் ரேஸிங்கில் ஆர்வம் உண்டு'' என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஏகே 64 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
- இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவதூறுகளை கூறி உள்ளார் அமித் ஷா.
* அமித்ஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
* தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி அவதூறுகளை பரப்புகிறார்கள்.
* அமித் ஷாவா இல்லை அவதூறு ஷாவா என நினைக்கும் அளவிற்கு உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி உள்ளார்.
* இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாமல் குற்றம்சாட்டுகிறார்.
* உள்துறை அமைச்சர் அமித் ஷா உண்மைக்கு புறம்பாக குற்றம்சாட்டுவது அவரது பதவிக்கு அழகல்ல.
* தமிழகத்தில் கலவரம் செய்துவிடலாம் என்ற எண்ணம் நான் இருக்கும் வரை நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும்.
- மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் பல உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுப்பணி, உள்ளாட்சி மூலம் பல பணிகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, நல்ல கல்வி, மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.
மக்கள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபை வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது. எல்லா தொகுதியிலும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவை மாநிலம் ஒட்டு மொத்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
4 பிராந்தியத்திலும் இன்னும் பல மக்கள் நல பணிகள் தொடங்கப்பட உள்ளது. நல்ல அரசாக செயல்பட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.
அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 500 ஆக வழங்குவதாக அரசு அறிவித்தது. மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000-ம் முதலில் வழங்கப்படும். உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும். மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உட்பட உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
இந்த தொகையும் விரைவில் உயர்த்தி வழங்கப்படும். புதுவையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கலுக்கு எந்தளவுக்கு பரிசு தொகை தரமுடியுமோ அவை வழங்கப்படும். போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையாக அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
- அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
- சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு ஊழியர்களின் 22 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளோம்.
* ஓய்வு கால வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக முதலமைச்சர் மாற்றி உள்ளார் என கூறி உள்ளனர்.
* 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் பொங்கலை கொண்டாட ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளோம்.
* சென்னையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்க உள்ளேன்.
* முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தரக்கூடிய மகிழ்ச்சி பொங்கல் இது.
* 2019ம் ஆண்டு இ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது லேப் டாப் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.
* அ.தி.மு.க. ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்து விட்டதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
* டெல், ஏசெர், எச்.பி. போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களின் மடிக்கணினிகளை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இன்று காலை அ.தி.மு.க- பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் பா.ம.க. ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் வருகைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க பா.ஜ.க. தீவிர பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
- விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.
அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.
இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.
அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

கைதானவர்கள்
இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.
ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.
பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.
அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.
இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது.
- பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளது.
துபாய்:
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டில் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்கதேச வீரர் முஸ்டாபிசுர் ரகுமானுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது. பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே வங்கதேசத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் விளையாட வேண்டும் இல்லையென்றால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. எச்சரித்ததாக கூறப்படுகிறது. காணொலி அழைப்பின் மூலம் இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஐ.சி.சி.யி டம் இருந்து தங்களுக்கு இறுதி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
20 ஓவர் உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. வங்கதேசம் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசுடன் பிப்ரவரி 7-ந்தேதியும், இத்தாலியுடன் 9-ந் தேதியும், இங்கிலாந்துடன் 14-ந்தேதியும், நேபாளத்துடன் 17-ந்தேதியும் மோதுகிறது. கொல்கத்தா, மும்பையில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகிறது.
- சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் 'தம்பி' படம் வெளியானது.
- பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தில் சீமானின் 'தம்பி' படமும் இணைந்துள்ளது. சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் வெளியான 'தம்பி' திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
திண்டுக்கல்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திண்டுக்கல் சென்றார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற விழாவில் புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாற்று திறனாளி பயனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள், வேளாண் கருவிகள், மகளிர் திட்டத்தின் மூலமாக 4 சக்கர வாகனங்கள், தாட்கோ மூலமாக 4 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், 212 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.13 ஆயிரத்து 342 கோடியில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் ரூ.20,387 கோடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை மக்களுக்கு முதலமைச்சர் அர்ப்பணித்துள்ளார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* திண்டுக்கல் என்பது புரட்சி, எழுச்சி, வீரத்தின் பெயர்.
* ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் நடமாடிய இடம் திண்டுக்கல்.
* தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை சந்திப்பதில் பெருமை.
* இனிப்பான சர்க்கரை பொங்கலை போல் அறிவிப்பை கொடுத்து விட்டு இங்கே வந்திருக்கிறேன்.
* 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 1.79 கோடி மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டது.
* தி.மு.க. ஆட்சியில் கடந்த 4.5 ஆண்டுகளில் 1.99 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.
* இந்த விழா அரசு விழாவா? அல்லது மாநாடா? என்று வியப்பாக இருக்கிறது.
* கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 வீடுகள் கட்டப்படுகிறது.
* திண்டுக்கல் மாவட்டத்தில் 4 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்
- அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதை இந்தியா கடுமையாக எதிர்த்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் ரஷிய கச்சா எண்ணை விவகாரத்தில் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த என்னால் முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புகளால் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது. ஆனால் இந்தியா அதிக வரி செலுத்துவதால் அவர் என் மீது மகிழ்ச்சியாக இல்லை. அமெரிக்காவின் வரி விதிப்புகளால் என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் இப்போது இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளது.
அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், வலிமையானதாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளது.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
- புதுவரவு மாடலான சிம்பிள் அல்ட்ரா 400 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது.
- இந்தியாவில் இதுவரை பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களில் உள்ளதை விட மிகப்பெரியது ஆகும்.
சிம்பிள் எனர்ஜி நிறுவனம், சிம்பிள் அல்ட்ரா என்ற புதிய ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும், சிம்பிள் ஒன் மற்றும் சிம்பிள் ஒன்.எஸ். ஆகியவற்றை ஜென் 2 வடிவத்திற்குப் அப்டேட் செய்து அதன் ஜென் 2 ஸ்கூட்டர் சீரிசை அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம் அதன் போர்ட்ஃபோலியோவை நான்கு தனித்துவமான மாடல்களுக்கு கொண்டு செல்வதாக அந்நிறுவனம் கூறுகிறது.
புதிய சிம்பிள் அல்ட்ரா மாடல் முழு சார்ஜில் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விலை பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது. 236 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் சிம்பிள் ஒன் 4.5 கிலோவாட் மாடலின் விலை ரூ. 1.69,999 என்றும் 265 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் சிம்பிள் ஒன் 5 கிலோவாட் மாடலின் விலை ரூ. 1,77,999என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
190 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் சிம்பிள் ஒன்.எஸ். ஜென் 2 மாடல் அறிமுக சலுகையாக ரூ. 1,39,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை முடிந்ததும் இதன் விலை ரூ. 1,49,999 லட்சமாக உயரும்.
புதுவரவு மாடலான சிம்பிள் அல்ட்ரா 400 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்குகிறது. இதற்காக இந்த மாடலில் அந்நிறுவனம் 6.5kWh பேட்டரி வழங்கியிருக்கிறது. இது இந்தியாவில் இதுவரை பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களில் உள்ளதை விட மிகப்பெரியது ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை சிம்பிள் ஒன் ஜென் 2 ஸ்கூட்டர்களில் 7 இன்ச் தொடுதிரை உள்ளது, அதே நேரத்தில் ஒன்.எஸ். ஜென் 2 மாடலில் டச் ஸ்கிரீன் வசதி இல்லை. இரண்டுமே LTE மற்றும் ப்ளூடூத்துடன் கூடிய 5G e-SIM ஐப் பெறுகின்றன. இத்துடன் நேவிகேஷன் வசதி வழங்குகிறது. இதற்காக சிம்பிள் ஒன் ஜென் 2 மாடலில் பில்ட்-இன் மேப்ஸ், ஒன்.எஸ். ஜென் 2 மாடலில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழங்கப்படுகிறது.
இவைதவிர ஃபைண்ட் மை வெஹிக்கிள், TPMS, பார்க் அசிஸ்ட், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் மற்றும் IP65 தர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சிம்பிள் ஒன் ஜென் 2 (4.5kWh), சிம்பிள் ஒன் ஜென் 2 (5kWh) மற்றும் சிம்பிள் ஒன்.எஸ். ஜென் 2 ஆகிய மூன்று மாடல்கள் உடனடியாக வாங்கக் கிடைக்கின்றன என்று சிம்பிள் எனர்ஜி கூறுகிறது.






