செய்திகள்
பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியா?- வைகோ பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த வைகோ, போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். #vaiko #parliamentelection
திருச்சி:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி தீர்ப்பு வருகிற செவ்வாய்க்கிழமை வருகிறது. அந்த தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதமாக வந்தால் அதற்கு காரணம் அ.தி.மு.க. அரசுதான். பள்ளி- கல்லூரிகளில் இந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றார்.
பின்னர் பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த வைகோ, நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். #vaiko #parliamentelection