செய்திகள்
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்- திருமாவளவன் பங்கேற்பு
13 வயது சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்பட்டியை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் ராஜலெட்சுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்ததுடன் கடந்த 22-ந்தேதி அவரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கும் அவர் மீது பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தற்போது குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜலெட்சுமியை கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமாரை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மாணவியின் கொடூர கொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் மவுனம் காப்பதாக கூறியும், கொலையாளி தினேஷ்குமாருக்கு அதிகபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், திராளக பங்கேற்றனர். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan
சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்பட்டியை சேர்ந்தவர் சாமிவேல். இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர் ராஜலெட்சுமிக்கு பாலியல் தொந்தரவு செய்து வந்ததுடன் கடந்த 22-ந்தேதி அவரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய ஆத்தூர் போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கும் அவர் மீது பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தற்போது குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜலெட்சுமியை கொடூரமாக கொலை செய்த தினேஷ்குமாரை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மாணவியின் கொடூர கொலைக்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் மவுனம் காப்பதாக கூறியும், கொலையாளி தினேஷ்குமாருக்கு அதிகபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள், திராளக பங்கேற்றனர். #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan