இந்தியா

கிரிக்கெட் விளையாடும் யானை

Published On 2024-04-30 03:53 GMT   |   Update On 2024-04-30 03:53 GMT
  • ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ மீண்டும் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவது சகஜம் தான் என்றாலும், யானை ஒன்று மனிதர்களை போல தும்பிக்கையில் பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், யானை ஒன்று பூங்காவுக்கு அருகே சிலருடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் உள்ளது. அதில், சிலர் பீல்டிங் செய்த நிலையில் ஒருவர் யானைக்கு பந்து வீசுகிறார். அந்த பந்தை யானை தும்பிக்கையால் அடிக்கும் காட்சிகளும், பந்தை பீல்டிங் செய்பவர்கள் அதனை பிடித்து மீண்டும் யானைக்கு பந்து வீசும் காட்சிகளும் உள்ளது.

இந்த வீடியோ கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டு படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஆனாலும் தற்போது நாடு முழுவதும் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ மீண்டும் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News