ராகுல் காந்தி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம்: சி.பி.ஐ. எம்.பி. வருத்தம்
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
- பாராளுமன்ற நடவடிக்கையில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி ஐந்து நாட்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்கவில்லை. ஜெர்மனிக்கு இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் நிகழ்ச்சிக்காக சென்றார்.
ராகுல் காந்தி ஜெர்மனி சென்றதை. பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்தது. தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம், ஜி ராம் ஜி மசோதா குறித்து பாராளுமன்றத்தில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம் என சி.பி.எம். எம்.பி. ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜான் பிரிட்டாஸ் கூறியதாவது:-
நாங்கள் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி அவை நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக விவாதத்தில் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்த்தோம். அது எங்களுடைய எதிர்பார்ப்பும், விருப்பமுமாக இருந்தது. ராகுல் காந்தி அந்த நேரத்தில் அவையில் இருந்திருந்தால், அனைத்தும் வேறு மாதிரி இந்திருந்திருக்கும்.
மேலும், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் தேதி ஏறக்குறைய கடந்த மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. ஏறக்குறைய டிசம்பர் 22-ந்தேதி வாக்கில் முடிவடையும் என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த நேரத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்ற அட்டவணையை திட்டமிட வேண்டாம் மற்றும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று நாங்கள் (இந்தியா கூட்டணி கட்சிகள்) சொல்ல வேண்டுமா?. அல்லது காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு சொல்ல வேண்டுமா?
இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.