இந்தியா

மும்பையில் "சிக்கன் சவர்மா" சாப்பிட்ட 12 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

Published On 2024-04-30 03:33 GMT   |   Update On 2024-04-30 03:33 GMT
  • மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
  • சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை:

சமீபகாலமாக சிக்கன் சவர்மா உணவு வகை பிரபலமாகி இருக்கிறது. இருப்பினும் சிக்கன் சவர்மாவை சாப்பிட்டு பலர் நொந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன.

தற்போது மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவியும், கேரளாவில் ஒரு சிறுமியும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News