செய்திகள்

விழுப்புரத்தில் 24-ந் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக விஜயகாந்த் போராட்டம்

Published On 2017-10-20 06:57 GMT   |   Update On 2017-10-20 06:58 GMT
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 24-ந்தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை. இதற்காக தமிழக அரசையும், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்களையும் கண்டித்தும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கூட்டுறவு வங்கி மற்றும் மத்திய வங்கிகளில் பெற்ற கடனை ரத்து செய்யாத அரசுகளைக் கண்டித்தும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் வருகிற 24-ந் தேதி காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பேருர் ஊராட்சி வார்டு, கிளைக்கழகம் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் விவசாய பெருமக்களும் கலந்து கொண்டு விவசாயிகள் உழைப்பை உறிஞ்சும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்ப ஒன்று சேருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News