செய்திகள்

மோடி அனில் அம்பானிக்குதான் காவலாளி - ராகுல் காந்தி காட்டம்

Published On 2019-05-07 10:52 GMT   |   Update On 2019-05-07 10:52 GMT
அனில் அம்பானியை போன்ற திருடனுக்கு பிரதமர் மோடி காவலாளியாக உள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். #LokSabhaElections2019 #RahulGandhi #Modi #AnilAmbani
ஜார்க்கண்ட்:

ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள டாடா கல்லூரியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி அனில் அம்பானிக்கு தான் காவலாளியாக உள்ளார். மக்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோஸ்கி உள்ளிட்டோருக்கு வழங்குகிறார்.



தனியார் நிறுவனங்களுக்காக அளிக்கப்பட்ட பஸ்தார் உள்ளிட்ட பழங்குடியினரது நிலங்களை திரும்ப அவர்களுக்கு அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க முடிவை சத்தீஸ்கர் மாநில அரசு எடுத்துள்ளது.

மோடிஜி அவர்களே, அடுத்த முறை நீங்கள் ஜார்க்கண்ட் வரும்போது பா.ஜ.க. அரசினால் திரும்ப அளிக்கப்பட்ட நிலங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #RahulGandhi #Modi #AnilAmbani
Tags:    

Similar News