உள்ளூர் செய்திகள்

தா.பேட்டை வட்டார கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் தீ விபத்து

Published On 2024-05-05 10:17 GMT   |   Update On 2024-05-05 10:17 GMT
  • தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
  • தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.

தா.பேட்டை:

திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தா.பேட்டை ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதிவேடுகள், பள்ளி மாணவ, மாணவிகள் குறித்தான அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்த வட்டார கல்வி அலுவலகத்தின் அருகே காலியாக இருந்த இடத்தில் சருகுகள், காய்ந்த கட்டைகள் கிடந்தது. நள்ளிரவில் இதில் எதிர்பாராத விதமாக பட்ட நெருப்பு வட்டார கல்வி அலுவலகத்தின் உள்ளே பரவி உள்ளது.

நள்ளிரவு முழுவதும் உள்ளே எரிந்த நிலையில் அதிகாலை அலுவலகத்தில் இருந்து புகை வருவதை அப்பகுதியினர் பார்த்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஆசிரியர்கள் அப்பகுதியினர் விரைந்து வந்து பீரோ கணினிகள் உள்ளிட்ட வைகளை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பள்ளி மாணவர்கள் சீருடைகள், பழைய ரெக்கார்டு பதிவேடுகள் அனைத்தும் தீயில் கருகியது.

Tags:    

Similar News