என் மலர்

    நீங்கள் தேடியது "Rahul Gandhi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
    • பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது

    வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.

    தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.

    இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.

    நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:

    ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.

    இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.

    எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
    • வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும்.

    திருவனந்தபுரம்:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது ராகுல்காந்தியை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ராகுல்காந்தி வயநாடு தொகுதிக்கு தனி கவனம் செலுத்தி வந்தார்.

    அதே போல வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் ராகுல்காந்தி இந்த தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த சூழ்நிலையில் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்த முறை வயநாடு தொகுதியை காங்கிரஸ் தங்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி விரும்புகிறது. இதனால் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்ள திட்டமிட்டு உள்ளது. மேலும் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் இறங்கவேண்டும் என விரும்புவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் தெரிவித்து உள்ளன.

    டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள பிரிவு அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கும்.

    எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கருதுகிறது. இந்தியக் கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்டுக்கு எதிராகப் போட்டியிடுவது எதிர்மறையாகக் கருதப்படலாம் என்று அந்த கட்சி கூறுகிறது.

    இதுபற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "எங்கள் வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் இறுதி முடிவு எடுக்கும். குழு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை,'' என்றார்.

    கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறுகையில், வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து கூற உரிமை உண்டு. வயநாட்டில் ராகுல் காந்தியை மீண்டும் களமிறக்குமாறு நாங்கள் ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் இதை கண்டு கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
    • பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கேள்விகளால் துளைத்து எடுத்தார். மகளிர் இடஒதுக்கீடு ஏன் நிறைவேற்றப்பட்டது, பா.ஜ.க. ஏன் இதில் இத்தனை அவசரம் காட்டியது என்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.

    இது குறித்து பேசிய ராகுல் காந்தி, "மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து மத்திய அரசு சார்பில் எந்த விதமான தகவல்களும் வழங்கப்படவே இல்லை. பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் இந்தியா vs பாரத் பற்றிய விவாதத்திற்கு தான் என்று அவர்கள் முதலில் சொன்னார்கள். ஆனால், மக்கள் இதை கண்டுக்கொள்ளாததால், அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். மேலும் சிறப்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவந்தனர்."

    "நாங்கள் இந்த மசோதாவை ஆதரித்தோம். பா.ஜ.க. தற்போது புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முறையாக எல்லைகளை கட்டமைத்த பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமலுக்கு கொண்டுவருவோம் என்று அறிவித்து இருக்கிறது. உண்மையில், 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனே அமலுக்கு கொண்டுவர முடியும்."

    "ஆனால், பா.ஜ.க. இடஒதுக்கீட்டை பத்து ஆண்டுகளுக்கு தாமதப்படுத்த நினைக்கிறது. மேலும் இந்த இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெறக் கூடாது என்றும் பா.ஜ.க. நினைக்கிறது," என்று ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி.யின் தரக்குறைவான கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
    • பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனிஷ் அலியை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி.

    காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனிஷ் அலியை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தனிஷ் அலியுடனான சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருக்கும் ராகுல் காந்தி, எதிர்ப்புகள் நிறைந்த சந்தையில், அன்புக்கும் இடமுண்டு என்று தெரிவித்து உள்ளார்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி தனிஷ் அலியை தன் மதத்துடன் தொடர்புப்படுத்தி தீவிரவாதி, பயங்கரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனிடையே ராகுல் காந்தி உடனான சந்திப்பு குறித்து பேசிய தனிஷ் அலி, "எனது மன உறுதியை அதிகப்படுத்தவும், தனது ஆதரவை தெரிவிக்கவும் அவர் இங்கே வந்திருந்தார். மேலும், நான் தனியாக இல்லை என்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவாக இருக்கும் அனைவரும் என்னுடன் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்," என்று தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
    • இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். மகளிர் மசோதாவில் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும்.

    நாடு தழுவிய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் (ஓ.பி.சி.)எவ்வளவுபேர் இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

    அமைச்சரவை செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர்கள் 90 பேரில் 3 அதிகாரிகள் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் ஓ.பி.சி. பற்றி பேசுகிறார், ஆனால் அவர் ஓ.பி.சி. பிரிவினருக்கு என்ன செய்தார்?

    நாட்டில் 5 சதவீத மக்களே எஞ்சிய 95 சதவீத மக்களுக்கு சட்டத்தை உருவாக்குகிறார்கள். மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முன்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.

    இதற்கு 10 ஆண்டுகளாவது ஆகும். சிறப்பு கூட்ட தொடரின் நோக்கமே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாதான். எனவே இந்த மசோதாவை உடனே செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை.

    இப்போதைய நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அரசியலை திசை திருப்பும் செயலாகவே தெரிகிறது. எனவே காங்கிரஸ் மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும். மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் ஓ.பி.சி. பிரிவினர் பயன்பெற உள் ஒதுக்கீடு அவசியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் போர்ட்டர்களை சந்தித்தார்.
    • போர்ட்டர்களுக்கான சிகப்பு சட்டை அணிந்து லக்கேஜ் தூக்கினார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி, நாடு தழுவிய பாத யாத்திரை மேற்கொண்டார். அப்போது பல்வேறு தரப்பு மக்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாற்றினார்.

    திடீரென விவசாயிகளுடன் சேர்ந்து டிராக்டர் ஓட்டுதல், டூவீலரை ரிப்பேர் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார்.

    அந்த வகையில் இன்று ராகுல் காந்தி டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையம் சென்றார். அங்கு அவர் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் (porters) உரையாடினார். பின்னர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிகப்பு நிற சட்டையை அணிந்து, கையில் சுமையையும் தூக்கினார்.

    இதுகுறித்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் ''மக்களின் தலைவன் ராகுல் காந்தி அவருடைய போர்ட்டர் நண்பர்களை சந்தித்தார். சமீபத்தில், ரெயில் நிலைய போர்ட்டர் நண்பர்கள் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

    இன்று ராகுல் காந்தி அவர்களை சந்தித்தார். அவர்கள் பணி குறித்து கேட்டறிந்தார். பாரத் ஜோடோ பயணம் தொடர்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
    • நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.

    பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

    இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ராகுல் காந்தி மசோதாவை ஆதரித்து பேசியுள்ளார். மேலும், இந்த மசோதா முழுமை பெறாமல் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

     

    இகு குறித்து பேசும் போது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இது நம் நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும். அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், பல்வேறு வழிகளில் அவர்கள் திறமை மிக்கவர்கள்."

    "ஆனால், என் பார்வையில் இந்த மசோதா ஒருவிதத்தில் முழுமை பெறாமல் உள்ளது. எனக்கு ஓ.பி.சி. பிரிவை சார்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ள 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள். இந்த சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால், இந்த மசோதா முழுமையற்றதாக இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராகுல் காந்தியின் பாத யாத்திரையை போதுமான அளவில் காட்டவில்லை என காங். விமர்சனம்
    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை

    இந்தியா கூட்டணி 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் காண வேண்டும் என்றால், ராகுல் காந்தியைத்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சம்பித் பத்ரா கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சி, அதன் சொந்த நலனுக்காக உண்மையிலேயே யாரையாவது புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால், அவருடைய பெயர் ராகுல் காந்தி. உங்களுடைய தலைவருக்கு வலிமை இல்லை. நீங்கள் யாரையெல்லாம் புறக்கணிப்பீர்கள்?. புறக்கணித்து, முன்னேற வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய தலைவரை புறக்கணியுங்கள்.

    இந்தியாவில் எதிர்க்கட்சிகளால் தாக்கப்படாத அமைப்புகளே இல்லை. நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து அமைப்புகள் மேலும் தாக்குதல். காங்கிரஸ் கட்சி அன்பை பற்றி பேசுகிறார்கள். ஆனால் வெறுப்பை வீசுகிறார்கள். ஹிட் லிஸ்ட் பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டு, தாக்கப்படுவார்கள். அவர்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.

    இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
    • ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது.

    புதுடெல்லி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி "சனாதனம்" பற்றி பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர் பொன்முடி ஆகியோரும் சனாதனம் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

    சனாதனம் பற்றிய பேச்சுகளுக்கு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசி வருவதற்கு சோனியாவும், ராகுலும் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஜே.பி.நட்டா வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராகுல், சோனியா மற்றும் காங்கிரசுக்கு சனாதனத்தின் மீது வெறுப்பு உள்ளது. சனாதனத்தின் மீது இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வெறுப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எரிக், பருவநிலை மாற்றங்கள் குறித்து முக்கிய கருத்துக்களை கூறுபவர்
    • இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்களை ராகுல் கூறினார் என்றார் எரிக்

    வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நார்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ (Oslo).

    இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், ராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim), முன்னாள் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டங்களின் செயல் இயக்குனராக பதவி வகித்தவர். இவர், பருவநிலையின் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து உலக நாடுகள் செயலாற்ற வேண்டியது குறித்து தனது கருத்துக்களை உலகெங்கும் கூறி வருகிறார். கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் அதிக மக்கள் தொகையின் காரணமாக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்த நேரிடும் என்றும் இதனால் இந்தியாவில் காடுகள் அழியும் நிலை அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்றார்.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது:

    ராகுல் காந்தி, நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான எர்னா ஸோல்பர்க் (Erna Solberg) மற்றும் ஸ்வெர் மிர்லி (Sverre Myrli) ஆகியோருடன் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் ஆகியோரையும் சந்தித்தார். அந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது.

    இவ்வாறு அக்கட்சி தெரிவித்திருந்தது.

    நார்வே சென்ற ராகுல், எரிக் சொல்ஹெய்மையும் அங்கு சந்தித்தார்.

    இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு செய்திருப்பதாவது:

    நவீன இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முன்னணி வணிக தலைவர்களுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்தது. இதில் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல், இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும், அடுத்த வருடம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பின்னணியில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அவரது கருத்துக்களை வெளியிட்டதாக எரிக் கூறினார்.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print