செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டுவீழ்த்தியது பாதுகாப்பு படை

Published On 2018-08-02 11:04 GMT   |   Update On 2018-08-02 11:04 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #MilitantGunnedDown
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை அடியோடு களைவதற்கு பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் முகாம்களை கண்டறிந்து அழித்தல், அவர்களின் ஊடுருவலை தடுத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் அம்மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மிகவும் தீவிரமாக நடைபெற்ற இந்த மோதலில், பயங்கரவாதிகளில் 2 பேர் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில டி.ஜி.பி தெரிவித்துள்ளார். #JammuKashmir #MilitantGunnedDown
Tags:    

Similar News