இந்தியா

உ.பி.யில் 17 வயது சிறுமியை கடத்தி 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

Published On 2024-04-28 12:23 GMT   |   Update On 2024-04-28 12:23 GMT
  • பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர்
  • பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்

உத்தரப்பிரதேசம் மாநிலம் லகிம்பூர் கேரி பகுதியில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த 17 வயது சிறுமியை கடத்தி 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அமன் என்கிற 22 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் முகத்தில் தனது பெயரை சூடான இரும்புக் கம்பியால் எழுதி கொடூரமாக சித்ரவதை செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டுள்ள காவல்துறையினர் ஏப்ரல் 19 அன்று குற்றம் நடந்ததாக தெரிவித்தனர். 

Tags:    

Similar News