செய்திகள்

எ.வ.வேலுவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-20 08:42 GMT   |   Update On 2018-07-20 08:42 GMT
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SC #EVVelu
புதுடெல்லி:

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக 11 லட்சத்துக்கும் மேல் சொத்து சேர்த்ததாக 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

திருவண்ணாமலை கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து 2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


இதையடுத்து எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா, சந்தன கெளடா அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருவண்ணாமலை கீழமை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது சரியானதே என நீதிபதிகள் தெரிவித்தனர். எ.வ. வேலு மற்றும் அவரது மனைவி மீது அரசியல் பழி வாங்கும் நோக்கத்துடன் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளதாக கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். #SC #EVVelu #AssetsCase
Tags:    

Similar News