search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court"

    • பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - நிர்மலா சீதாராமன்
    • பாஜக தோற்றுவிட்டால் அவர்களுக்கு இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள் - காங்கிரஸ்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் எம்.பி, "தேர்தல் பத்திர நன்கொடை முறையை திரும்பக் கொண்டு வருவோமென நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால், இந்த தேர்தலுக்கு அவர்களிடம் பணம் இருக்கிறது. ஆனால் இதில் அவர்கள் தோற்றுவிட்டால் இன்னும் பணம் தேவைப்படும். அதற்குதான் தேர்தல் பத்திர முறையை பற்றி மீண்டும் பேசுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என பா.ஜ.க கூறுகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதையே பா.ஜ.க இப்போதும் விரும்புகிறது. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் எத்தனை கோடி கொள்ளையடிப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வரப்பட்டது
    • கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

    "வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தேர்தல் பத்திர திட்டத்தை வேறு ஏதேனும் ஒரு வடிவத்தில் மீண்டும் கொண்டு வருவோம்.

    தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    "தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத்தன்மை நிறைந்தது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது. அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக தேர்தல் பத்திர திட்டம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்திய அரசியலில் கருப்பு பணத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தேர்தல் பத்திரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கருப்பு பணம் திரும்பி விடும் என அஞ்சுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், "தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ததைவிட அதை மேம்படுத்தி இருக்கலாம் என நான் நம்புகிறேன். ஆனால், அதில் ஏதும் செய்ய முடியாது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறேன்' என்று கூறியிருந்தார்.

    தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அத்துடன் நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை விவரம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நன்கொடையாளர்கள் பெயர், கட்சிகள் பெற்ற தொகை ஆகிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும்.
    • இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும்.

    இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

    EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஜனநாயக சீரமைப்புக்கான சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

    அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

    அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "வெளிநாட்டு தேர்தலை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது. என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

    • 10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?
    • இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது.

    இந்தியாவில் EVMs மூலம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விவிபாட் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை காட்டும். ஆனால் ரசீது வாக்காளரிடம் வழங்கப்படாது. பெட்டிக்குள் சேகரிக்கப்படும்.

    EVMs மீது சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சியினர் விவிபாட்டில் உள்ள அனைத்து ரசீதுகளையும் எண்ண வேண்டும் எனத் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து விவிபாட் என்ற வகையில் எண்ணப்படுகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் அனைத்து விவிபாட்டையும் எண்ண முடியாது எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களித்ததற்கான ரசீது வழங்க வேண்டும். பின்னர் அந்த ரசீது ஒரு பெட்டியில் சேரிக்கப்பட்டு அது எண்ணப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    ஜனநாயக சீரமைப்பு சங்கத்தின் சார்பில் ஆஜரான பிரஷாந்த் பூஷன் "நாம் மீண்டும் பழைய நடைமுறையான வாக்குச்சீட்டு முறைக்கு செல்ல முடியும். இல்லையெனில் விவிபாட்டின் ரசீது வாக்காளர்களின் கைக்கு கிடைக்கப் பெற வேண்டும். அதை அவர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும். விவிபாட் டிசைன் மாற்றப்பட்டுள்ளது" என்றார். அத்துடன் ஜெர்மனியில் நடைபெறும் தேர்தல் நடைமுறையை உதாரணத்திற்கு கூறினார்.

    அதற்கு நீதிபதி திபன்கார் தத்தா, ஜெர்மனியின் மக்கள் தொகை எவ்வளவு என கேட்க, பிரஷாந்த் பூஷன் சுமார் 6 கோடி இருக்கும் என்றார்.

    அப்போது நீதிபதி கண்ணா "நமது நாட்டில் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது நாம் எல்லோருக்குத் தெரியும்." என்றார்.

    அப்போது மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே "EVMs விவிபாட் ரசீதுடன் ஒப்பிட்டு சரியாக இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்" என்றார்.

    உடனே நீதிபதி கண்ணா "60 கோடி விவிபாட் ரசீதுகள் எண்ணப்பட வேண்டும். சரிதானே?" என்றார்.

    மேலும், "இயந்திரம் வழக்கமாக மனிதன் குறிக்கீடு இல்லாமல் சரியான முடிவுகளை கொடுக்கும். மனிதன் குறுக்கிடும்போது அல்லது அங்கீகரிக்கப்படாத மாற்றங்களை (மென்பொருள் மற்றும் இயந்திரம்) செய்யும்போது பிரச்சனை எழுப்பப்படுகிறது. இதை தவிர்க்க ஏதாவது ஆலோசனை இருந்தால் தெரிவிக்கலாம்" என்றார்.

    பிரஷாந்த பூசன் "ஒரே சட்டமன்ற தொகுதிக்கு ஐந்து பிவிபாட் இயந்திரத்தில் உள்ள ரசீதுகள் எண்ணப்படுகின்றன. 200 இயந்திரங்களில் இது வெறும் ஐந்து சதம் வீதம்தான். இது நியாயமாக இருக்க முடியாது. ஏழு வினாடி லைட் தவறாக வழி நடத்தப்படலாம். வாக்காளர் விவிபாட் ரசீதை பெற்று, அதை வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்."

    சீனியர் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயன் "பிராசந்த் பூஷன் தெரிவிக்கும் அனைத்தும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கெட்ட எண்ணத்தில் கூறவில்லை. தன்னுடைய வாக்கு போடப்பட்டது என்ற நம்பிக்கை வாக்காளருக்கு ஏற்பட வேண்டும். இது ஒன்றுதான்" என்றார்.

    உடனே, உச்சநீதிமன்றம் வாக்களிக்கும் நடைமுறை, EVMs-ன் சேமிப்பு மற்றும் வாக்கு எண்ணப்படுதல் உள்ளிட்ட அனைத்தை தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது.

    நீதிபதி கண்ணா "EVMs இயந்திரத்தை டேம்பரிங் செய்யப்படும் நபருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வாய்ப்பு இல்லை. இது முக்கியமான விசயம். பயப்படும் வகையில் தண்டனை இருக்க வேண்டும்." என்றார்.

    வழக்கறிஞர் சங்கரநாராயணன் "வாக்காளர்கள் ரசீதை பெற்று வாக்குப்பெட்டியில் செலுத்த அனுமதிக்க வேண்டும்" என்றார.

    அதற்கு நீதிமன்றம் "10 சதவீத வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட ஒட்டுமொத்த நடைமுறையையும் நிறுத்த வேண்டும். இது நியாயமா?." என்றது. அதற்கு வழக்கறிஞர் சங்கரநாராயணன் "ஆம், அதைக் கேட்க எனக்கு உரிமை உண்டு. நான் ஒரு வாக்காளர், வேண்டுமென்றே செயல்முறையை நிறுத்துவதால் எனக்கு என்ன லாபம்?" என்றார்.

    நீதிபதி திபன்கர் தத்தா வெளிநாட்டை நம்முடைய தேர்தலுடன் ஒப்பிடக் கூடாது என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "என்னுடைய வீடு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளது. ஜெர்மனியை விட மேற்கு வங்காளத்தில் மக்கள் தொகை அதிகம். நாம் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது அவசியம். இதுபோன்ற சிஸ்டத்தை வீழ்த்த முயற்சிக்கக் கூடாது. இதுபோன்ற உதாரணங்களை தெரிவிக்கக் கூடாது. ஐரோப்பிய நாடுகளின் உதாரணங்கள் இங்கு சரிபட்டு வராது" என்றார்.

    பிரசாந்த் பூஷனிடம் நீதிபதி திபன்கர் தத்தா, மக்கள் EVMs மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கு தரவுகள் உள்ளதா? என கேட்டார். அதற்கு பூஷன் ஆய்வுகளை குறிப்பிட்டார். அதற்கு நீதிபதி திபன்கர் தத்தா "நாங்கள் தனியார் தேர்தல் கணிப்பை நம்பவில்லை. எங்களுக்கு தரவுகள் வேண்டும். தரவுகள் அது உண்மையானதாக இருக்க வேண்டும், ஆனால் கருத்து அடிப்படையில் அல்ல. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தரவுகளை பெற இருக்கிறோம்." என்றார்.

    அத்துடன் இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

    • பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
    • விளம்பரம் வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்தது.

    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதிலளிக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆசார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே, ஆசார்யா பாலகிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதியளிக்கிறது என தெரிவித்தார். அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    அதன்பின், புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆசார்யா பாலகிருஷ்ணா வேண்டுகோள் விடுத்தனர்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்? நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து, விளம்பரங்களை வெளியிடுவதில் மாற்றங்கள் செய்வதாக பதஞ்சலி தரப்பில் உத்தரவாதம் அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    • டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்
    • கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.

    மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.

    கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, தற்போது இந்த கைது காரணமாக கேஜ்ரிவாலால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. ஆகவே விரைவாக இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக வரும் 19-ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.
    • சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மின்னஞ்சல் அனுப்புமாறு கெஜ்ரிவால் வக்கீல் அபிஷேக் சிங்வியுடன் கூறினார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கினைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.

    மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.

    கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.

    இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மின்னஞ்சல் அனுப்புமாறு கெஜ்ரிவால் வக்கீல் அபிஷேக் சிங்வியுடன் கூறினார்.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் அப்பீல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

    • பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
    • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என எச்சரித்துள்ளது.

    புதுடெல்லி:

    பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை.

    இந்த வழக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும் விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளீர்கள். ஆனால் கோர்ட்டில் பதிலளிக்க வில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

    நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் ஏப்ரல் 2-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    இதற்கிடையே, ஆச்சார்யா பால்கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை தனக்கு உண்டு. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற விளம்பரங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படாது என நிறுவனம் உறுதி அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

    ஆனால், அவர்களது நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் காட்டமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அதன்படி நீதிபதிகள் கூறியதாவது:

    பதஞ்சலி நிறுவனத்திற்கு நாங்கள் தாராளமாக இருக்க விரும்பவில்லை. அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் வேண்டுமென்றே கோர்ட் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதாகதான் நாங்கள் கருதுகிறோம்.

    அனைவரையும் ஒரே மாதிரிதான் பார்க்கிறோம். இதனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை யாரும் மீறக்கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்லவேண்டும். நீங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும்போது மிக அலட்சியமாக நடந்து கொள்கிறீர்கள், அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்கு காட்டக்கூடாது?

    எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறியுள்ளதால் பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் ஏற்கமுடியாது. உங்களது மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. அதனை நிராகரிக்கிறோம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தனிநபர் குறித்த விஷயம் கிடையாது என காட்டமாக தெரிவித்தனர்.

    மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள். பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் யாரெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லையோ அவர்கள் அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது.

    • சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
    • பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மதுபான ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால் அம்மாநிலத்தில் அவ்வாறு எந்த ஊழலும் நடைபெறவில்லை என நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

    இது தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சத்தீஸ்கரில் எவ்வித மதுபான ஊழலும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது. இதே கருத்தைதான் காங்கிரசும் முன்வைத்தது. இல்லாத ஒரு ஊழலை இருப்பதாக தெரிவித்து, யார் கொடுத்த அழுத்தத்தால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது?

    அமலாக்கத்துறையை பாஜக அரசு தவறாக பயன் படுத்தியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பே உறுதிப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாஜக பொய்களை மட்டுமே பரப்புகிறது என்பது தெளிவாகியுள்ளது பாஜகவின் உத்தரவின்படி எதிர்க்கட்சிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவே அமலாக்கத்துறை பணமோசடி வழக்குகளை பதிவு செய்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.
    • வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் தங்களுடைய அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துகள், தங்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை சொத்துக்களை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.

    மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்ற பின் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது தொடர்பான வழக்குகளை எதிர்கொண்ட சம்பவங்களும் உண்டு.

    வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒவ்வொரு மற்றும் அனைத்து சொத்துகளையும் முற்றிலுமாக தெரிந்து கொள்ள வாக்களார்களுக்கு முழு உரிமை கிடையாது.

    கணிசமான மதிப்பு அல்லது ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்காத பட்சத்தில், வேட்பாளர்கள் தங்களுக்கு அல்லது அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான ஒவ்வொரு அசையும் சொத்துகளையும் வெளியிட வேண்டியதில்லை.

    பொருத்தமற்றது என கருதும் விசயங்களை பொது அலுவலகத்தில் தெரிவிக்காத வகையில் வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு.

    இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால்,
    • தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?

    தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமினை ரத்து செய்த நிலையில், சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபாய் எஸ் ஒஹா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின்போது நீதிபதிகள் "யூடியூபில் அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்க தொடங்கினால், தேர்தலுக்கு முன்னதாக எத்தனை பேர் அடைக்கப்படுவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்?. அவருக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை அவர் தவறாக பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

    அவதூறாக பேசமாட்டேன் என அவருக்கு நிபந்தனை விதிக்க முடியாது. ஒரு அறிக்கை அவதூறா? அல்லது அவதூறு இல்லையா? என்பது எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது? என நீதிபதிகள் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழங்கறிஞர் முகுல் ரோஹத்கி நோக்கி கேள்வி எழுப்பினர்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது.
    • இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    2018 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி (SBI) கமிஷன் பெற்றுள்ளது.

    இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கும் நிதி அமைச்சகத்துக்கும் இடையேயான கடிதப் பரிமாற்றத்தில், வங்கி தனக்கு செலுத்த வேண்டிய "கமிஷன்" கோரிக்கையை வைத்தது. மேலும், தேர்தலை முன்னிட்டு பத்திரங்கள் விற்பனை அதிகரிக்கும் என்றும் எஸ்.பி.ஐ குறிப்பிட்டுள்ளது. அத்துடன், வங்கி தனது பரிவர்த்தனை கட்டணம் மற்றும் வங்கிக் கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி-யுடன் "கமிஷன்" செலுத்துவதற்கான வவுச்சர்களை உயர்த்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றத்தால் தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×