செய்திகள்

ராகுல் தலைமையில் காங்கிரஸ் புதிய உச்சத்துக்கு செல்லும்: மன்மோகன் சிங்

Published On 2017-12-16 10:25 GMT   |   Update On 2017-12-16 10:25 GMT
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உச்சத்துக்கு செல்லும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, இன்று (சனிக்கிழமை) தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதற்கான விழா டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.  விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:-

காங்கிரசுக்கு இது தனித்துவமிக்க நாள் ஆகும். சோனியா காந்தி கடந்த 19 ஆண்டுகளாக சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். கட்சியை சிறப்பாக வழி நடத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல சமூக திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

நான் பிரதமராக இருந்த 10 ஆண்டுகள் சோனியா வழிகாட்டுதல் இருந்தது. தற்போது அவர் தலைவர் பதவியை ராகுலிடம் ஒப்படைத்துள்ளார். தலைமையை ஒருங்கிணைத்த சோனியாவை பாராட்ட வேண்டும். ராகுல் தலைமையில் காங்கிரஸ் புதிய உச்சத்துக்கு செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News