என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனியா காந்தி"

    • ஆவணங்களைத் திருப்பி தர பலமுறை சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டது
    • முக்கியமான வரலாற்று ஆவணங்கள் ஏன் இன்னும் பொது ஆவணக் காப்பகத்திற்கு வெளியே உள்ளன என்பதுதான் கேள்வி

    கடந்த 2008ஆம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

    பி.எம்.எம்.எல்-இன் 2025 ஆண்டு தணிக்கையில் நேரு தொடர்பான ஏதேனும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளனவா என்று பாஜக எம்.பி சம்பித் பத்ரா மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,' பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் நடப்பாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேரு தொடர்பான ஆவணங்கள் எதுவம் மாயமானதாக கண்டறியப்படவில்லை. அருங்காட்சியகம் வசமுள்ள ஆவணங்கள் ஆண்டுதோறும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பாக கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை,' என பதிலளித்து இருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம், 'இறுதியில் உண்மை வெளியிடப்பட்டுவிட்டது. இனி மன்னிப்பு கேட்கப்போவது எப்போது,' என கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏப்ரல் 29, 2008ம் ஆண்டு சோனியா காந்தியின் பிரதிநிதியான எம்.வி. ராஜன், ஜவஹர்லால் நேருவின் அனைத்து தனிப்பட்ட குடும்ப கடிதங்கள் மற்றும் குறிப்புகளை சோனியா காந்தி திரும்பப் பெற விரும்புகிறார் என கடிதம் எழுதியிருந்தார்.

    இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, "நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள் உட்பட 51 அட்டைப்பெட்டிகள் 2008 இல் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டன". ஜனவரி 28, 2025 மற்றும் ஜூலை 3, 2025 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்ட கடிதங்கள் உட்பட,  இந்த ஆவணங்களைத் திருப்பி தர பலமுறை சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை அவர் இன்னும் திருப்பி தரவில்லை. ஜவஹர்லால் நேரு தொடர்பான ஆவணங்கள், இந்தியாவின் ஆவணப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்,  அவற்றை தனியார் சொத்தாகக் கருத முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கஜேந்திர சிங் ஷெகாவத்,

    'சோனியா காந்தியிடம் நான் மரியாதையுடன் கேட்கிறேன்: என்ன மறைக்கப்படுகிறது? என்ன ஒளித்து வைக்கப்படுகிறது? இந்த ஆவணங்களைத் திருப்பித் தராததற்கு சோனியா காந்தி கூறும் சாக்குப்போக்குகள் ஏற்கத்தக்கவை அல்ல. முக்கியமான வரலாற்று ஆவணங்கள் ஏன் இன்னும் பொது ஆவணக் காப்பகத்திற்கு வெளியே உள்ளன என்பதுதான் கேள்வி. இவை தனிப்பட்ட குடும்ப ஆவணங்கள் அல்ல. அவை இந்தியாவின் முதல் பிரதமருடன் தொடர்புடையவை மற்றும் நமது தேசிய வரலாற்றுப் பதிவின் ஒரு பகுதியாகும். இத்தகைய ஆவணங்கள் பொது ஆவணக் காப்பகங்களில் இருக்க வேண்டும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் அல்ல.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டெல்லியில் வசித்த தீன் மூர்த்தி பவன் இல்லத்தில், அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை சார்பில் இது செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அருங்காட்சியகத்தை பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு அனைத்து பிரதமர்கள் தொடர்பான பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

    • உண்மை தங்கள் பக்கம் இருப்பதால் சோனியா, ராகுல் காந்தி நிரபராதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் (டிசம்பர் 16) ஏற்க மறுத்து நிராகரித்தது.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

    "நேஷனல் ஹெரால்டு வழக்கின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பதற்காக, மத்திய முகமைகளை பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையுமின்றி, அரசியல் எதிரிகளைத் துன்புறுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் மட்டுமே இதுபோன்ற வழக்குகள் புனையப்படுகின்றன. 


    மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் மீது காந்தி குடும்பத்தினர் உறுதியாக நிற்பதை பாஜகவால் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில், அவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் நோக்கில் இருக்கும்போதிலும், உண்மை மற்றும் அச்சமின்மை தங்கள் பக்கம் இருப்பதால், சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், என் சகோதரர் ராகுல் காந்தி நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். 

    இந்த பழிவாங்கும் நோக்கம் கொண்ட அணுகுமுறை, முதன்மை புலனாய்வு நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மட்டுமே மாற்றி வருகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.
    • பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.

    2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

    அண்மையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது.

    இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறையின் புகாரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

    எப்.ஐ.ஆர் (FIR)பதிவு செய்யாமல் ஈ.சி.ஐ.ஆர் (ECIR) பதிவு செய்து அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கைத் தொடங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    • குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே வாக்களர்
    • அவரது வயதை கருத்தில்கொண்டு அவரை விட வேண்டும்

    இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக பாஜக குற்றம் சாட்டிவரும் நிலையில், அது திட்டமிட்ட பொய் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா,

    "அவர்களிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? இது முற்றிலும் பொய். அவர் இந்தியாவின் குடிமகளாக ஆன பிறகுதான் வாக்களித்தார். அவருக்கு 80 வயதாகும்போதும் அவரை ஏன் பின்தொடர்கிறார்கள் என தெரியவில்லை. தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளார். அவரது வயதை கருத்தில்கொண்டு அவரை விட்டுவிட வேண்டும்" என தெரிவித்தார். 

    1980-81 வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதாக, அதாவது அவர் குடியுரிமை பெறுவதற்கு முன்பே அவர் பெயர் வாக்களர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் விகாஸ் திரிபாதி என்பவர் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை செப்டம்பர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். 

    இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் மறுசீராய்வு மனு தொடரப்பட்டது. இந்த மறுசீராய்வு தொடர்பாக ரூஸ் அவென்யூவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து இந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    • சோனியா காந்திக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • சோனியா காந்தி நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது 79-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    சோனியா காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • சோனியா காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,

    காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கை தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம், மதச்சார்ப்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியான உறுதியை பிரதிபலிக்கிறது.

    சோனியா காந்திக்கான கொள்கை பாதை இந்தியாவிற்கான நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தட்டும் என்று கூறியுள்ளார். 

    • யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடம் பெற்றிருந்தனர்.
    • 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.

    2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யங் இந்தியன்' நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.

    இதையடுத்து ஏ.ஜே.எல். நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து அந்தக் கடன் தொகைக்காக ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

    குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் பொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்தது.

    இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக டெல்லி கோர்ட்டில் தொடா் விசாரணையை மேற்கொண் டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது.

    இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

    ராகுல், சோனியா மீது புதிய வழக்கு

    இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கோர்ட்டில் இந்த வழக்கை ஒத்திவைத்த மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    • தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.
    • அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று. இதனைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    சக்தியின் உருவகமாக, இந்திரா காந்தி ஏராளமான புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொண்ட போதும், தன்னிறைவு, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பட்ட உலகளாவிய நிலைப்பாட்டை நோக்கி நாட்டை வழி நடத்தினார்.

    அவரது துணிச்சலான தலைமையும், நீதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கான தீவிர அர்ப்பணிப்பும் காங்கிரஸ் முன்னோக்கி செல்வதற்கு வழி காட்டுகின்றன என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை.
    • கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் மலர் தூவி மரியாதை.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், நேருவின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அவர்களுடன், மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

    • காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41-வது நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது.
    • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.

    புதுடெல்லி:

    காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நடத்தி வரும் கொடூர தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி அழைப்பு விடுத்து உள்ளார். இதுதொடர்பாக, நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

    பாலஸ்தீன பிரச்சினையில் மோடி அரசின் பதிலும், ஆழ்ந்த அமைதியும் மனிதாபிமானம் மற்றும் தார்மீகத்தைக் கைவிடுவதாக உள்ளது.

    இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பீடுகள் அல்லது அதன் மூலோபாய நலன்களை விட, பிரதமர் மோடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கும் இடையேயான தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் முதன்மையாக இயக்கப்படுவதாகத் தெரிகிறது.

    இத்தகைய தனிப்பட்ட ரீதியான ராஜதந்திர பாணி ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது. மேலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் திசைகாட்டியாகவும் இருக்க முடியாது.

    உலகின் பிற பகுதிகளில், குறிப்பாக அமெரிக்காவில் இதைச் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் சமீபத்திய மாதங்களில் மிகவும் வேதனையான மற்றும் அவமானகரமான வழிகளில் தோல்வி அடைந்துள்ளன.

    உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தனி நபரின் புகழ் பாடும் வகையிலோ, வரலாற்று பெருமைகளில் ஓய்வெடுக்கவோ முடியாது.

    அது தொடர்ச்சியான தைரியத்தையும் வரலாற்று தொடர்ச்சியின் உணர்வையும் கோருகிறது. இந்தியாவின் மவுனமான குரல், பாலஸ்தீனத்துடனான அதன் பற்றின்மையைக் காட்டுகிறது.

    பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இணைந்து விட்டது. நீண்ட காலமாகப் போராடி வரும் பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான முதல் படியாக இது உள்ளது.

    193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 150-க்கு மேற்பட்ட நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

    பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு பல ஆண்டாக ஆதரவளித்து வந்த இந்தியா, 1988 நவம்பர் 18-ம் தேதி பாலஸ்தீனத்தை நாடாக முறையாக அங்கீகரித்து, இந்த விஷயத்தில் ஒரு தலைவராக இருந்தது.

    இந்தியா நீண்ட காலமாக ஒரு நுட்பமான அதேநேரம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அமைதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

    நீதி, அடையாளம், கண்ணியம், மனித உரிமைகளுக்காக பாலஸ்தீன மக்கள் போராடி வரும் நிலையில் பாலஸ்தீன பிரச்சினையில் இந்தியா தலைமைத்துவத்தை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
    • 32 லட்சம் முதல் 58 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படும்.

    மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குழைக்கும் பேராபத்தான திட்டம் என்று முன்னணி நாளிதழ் ஒன்றில் சோனியா காந்தி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஷோம்பென் மற்றும் நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினரின் உயிர்வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக்கூடாது. ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

    இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

    இந்தத் திட்டத்தை நிர்மாணிப்பதில் மத்திய அரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடம் ஆலோசிக்காமல், கிரேட் நிக்கோபார் பழங்குடி கவுன்சிலின் முறையீடுகள் புறக்கணித்து திட்டம் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுவது கேலிக்கூத்தாகும். 

    அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இந்த திட்டத்திற்காக 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும், ஆனால் சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை இருக்கலாம்.

    ஆமைகள் முட்டையிடும் ஒரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதியில் துறைமுகம் காட்டப்படுகிறது.

    அந்தப் பகுதி பூகம்ப அபாயகரமான மண்டலத்தில் இருக்கும் நிலையில், அங்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் மேற்கொள்வது முதலீடு, உள்கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை மோசமான ஆபத்தில் ஆழ்த்தும்" என்று எச்சரித்துள்ளார்.

    பழங்குடியினர் உரிமைகளை பறித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பணியில் மத்திய அரசு ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

    ×