search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்மோகன் சிங்"

    • தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள்.
    • உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

    மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து தாங்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகத் தி.மு.க.வின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களது பதவிக்காலம் முழுவதும், தன்னடக்கம் அறிவாற்றல் உயர் அரசியல் பண்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி, கட்சி வேறுபாடின்றி அனைவரது நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளீர்கள். உங்களது தலைமைத்துவம், குறிப்பாகக் கடினமான காலங்களில் நீங்கள் அதை வெளிப்படுத்திய விதம், என்னை உட்படப் பலருக்கும் ஊக்கமாக இருந்துள்ளது.

    வாழ்வில் புதிய கட்டத்தை நோக்கித் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், இந்திய ஒன்றியத்துக்கும் இந்திய மக்களுக்கும் நீங்கள் ஆற்றிய பெருந்தொண்டினை எண்ணிப் பெருமை கொள்வீர்கள் என நம்புகிறேன்.

    தி.மு.கழகம் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் தாங்கள் நல்ல உடல்நலத்தோடும், மகிழ்ச்சியோடும் திகழவும், அடுத்து தாங்கள் மேற்கொள்ளும் பணிகளில் மனநிறைவெய்தவும் விழைகிறேன். தங்களது அறிவாற்றலாலும், தொலைநோக்குப் பார்வையாலும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிப்பீராக.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர்.
    • முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார்.

    1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நரசிம்ம ராவ் ஆட்சியின் போது அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாளையுடன் ஓய்வு பெறுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    கடந்த 1991 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார். இந்த நிலையில் அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

    மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார். அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். மன்மோகன் சிங் தவிர 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளனர். 

    • மன்மோகன் சிங் ஆறு முறை மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
    • இரண்டு முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநிலங்களவை எம்.பி.க்களில் 68 பேரின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையில் முடிவடைகிறது. இதையொட்டி அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பேசினார்.

    அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார். அப்போது "மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாக்கு அளிக்க மாநிலங்களவைக்கு வந்து, ஜனநாயகததின் வலிமைக்கு உதவியாக இருந்தார். மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. நீண்ட காலம் இந்த அவையையும் நாட்டையும் அவர் வழி நடத்திய விதம் மறக்க முடியாது. அவர் நம்மை தொடர்ந்து வழி நடத்த வேண்டிக் கொள்கிறேன்.

    ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். தனது கடமைகளை சிறப்புற நிறைவேற்றியர். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கது." என்றார்.

    மன்மோகன் சிங் 2014 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்திய பிரதமாக இருந்தார். ஆறுமுறை மாநிலங்களை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக தகவல்
    • பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. அதனைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இது காங்கிரஸ்-க்கு பெரிய அடியாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில்இந்திய பிரதமர்கள் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து 10 வருடம் ஆனதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் தகவல் தொடர்பு ஆலோசகர் பன்கஜ் பக்சோரி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் "இந்தியப் பிரதமர் கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகின்றன. 2012ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுடன், 62 திட்டமிடப்படாத கேள்விகளுக்கு அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பதிலளித்திருந்ததாக பதிவிட்டிருந்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்க் பதில் அளித்தும், அவர் அமைதி காத்ததாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்திருந்தன.

    இந்நிலையில் பாஜக பதவியேற்று 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்தியாவில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது தற்போது பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார்.

    உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீர்கள்?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சாதி, மத அடிப்படையில், இந்தியாவின் ஜனநாயக கொள்கையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என பதிலளித்திருந்தார் மோடி. அரசை விமர்சிப்பவர்களை வாய் திறக்காமல் செய்வதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிப்பதாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. இச்சம்பவம் அப்போது பேசுபொருளாகி விவாதத்தை ஏற்படுத்தியது.

    உலக நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்திப்பது உண்டு. 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 117 முறை செய்தியாளர்களை சந்தித்தார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்திக்காதது ஏன் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

    • முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார்.
    • இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, பிரதமராக அவரது தலைமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு இந்தியாவின் எதிர்காலத்தை மறுவடிவமைத்தது.

    அவரது ஆர்ப்பாட்டமில்லாத, அறிவார்ந்த மற்றும் பணிவான அணுகுமுறை எக்காலத்திலும் தலைமைத்துவத்திற்கு மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சிக்காக என்றும் அவர் நினைவுகூறப்படுவார். இன்னும் பல்லாண்டுகள் அவரது சிந்தனைகள் நமக்கு ஊக்கமளிக்கட்டும்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தற்போது 90 வயதாகிறது.
    • இவருக்கு அவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி :

    முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் (வயது 90) மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். இவருக்கு அவையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் வயது மூப்பு காரணமாக அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். எனவே அவைக்குள் இந்த நாற்காலியை பயன்படுத்துவதற்கு வசதியாக, மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை மாற்றப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், திக்விஜய் சிங் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த இருக்கை மாற்ற நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு உள்ளது.

    • இந்தியா-இங்கிலாந்து இணைந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
    • இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

    லண்டன் :

    இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.

    இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய மாணவர்களின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு இருநாடுகளிலும் கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வாழ்வில் ஆற்றிய பங்களிப்பிற்காக மன்மோகன் சிங்குக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட இந்த விருது, தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தால் விரைவில் டெல்லியில் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், "நமது நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் கீழ் இளைஞர்களிடம் இருந்து வரும் அர்த்தமுள்ள இந்த விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா-இங்கிலாந்து உறவு உண்மையில் நமது கல்விக் கூட்டாண்மை மூலம் வரையறுக்கப்படுகிறது. நமது தேசத்தை நிறுவிய மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், சர்தார் படேல் மற்றும் பலர் இங்கிலாந்தில் படித்து, சிறந்த தலைவர்களாக மாறினர். பல ஆண்டுகளாக எண்ணற்ற இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

    • டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார்.
    • பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத் தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் கூறி உள்ளார்.

    வேறுபாடுகளை ஒதுக்கி மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் என மற்ற எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். #BharathBandh #ManmohanSingh
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இதற்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில்:-

    மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள், சாதாரண மக்கள் என அனைவரும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை.

    மாறாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்களின் குரலை உணர்ந்து நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை காக்க அனைத்து எதிர்கட்சிகளும் முன்வர வேண்டும். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும்.

    என கூறினார். 
    வேலைவாய்ப்பு, கருப்பு பணம் மீட்பு உள்பட மோடி அரசு அளித்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். #ManmohanSingh
    புதுடெல்லி :

    காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் மந்திரியுமான கபில்சிபில் எழுதிய புத்தக வெளியீட்டு விழா புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 

    எளிமையான முறையில் தொழில் செய்யும் திட்டங்களில் இருந்து இன்னும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கணிசமான நன்மைகளை பெறவில்லை. விவசாயம், பொருளாதாரம் மற்றும் அண்டை நாடுகளுடன் நட்புறவில் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது.

    கடந்த 4 வருடங்களில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சதவிதம் மிகவும் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என மோடி அளித்த வாக்குறுதி என்ன ஆனது? மத்திய அரசின் இந்த வாக்குறுதியை எதிர்பார்த்து இளைஞர்கள் மிகவும் வேதனையுடன் காத்திருக்கிறார்கள்.  

    நாட்டில் உள்ள பெண்கள், தலித்கள் மற்றும் சிறுபான்மையினர்கள் ஒருவித பாதுகாப்பின்மையோடு வாழ்ந்து வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்கப்படும் என இந்த அரசு அளித்த வாக்குறுதி தொடர்பாக எந்த ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

    பல்வேறு வாக்குறுதிகளை கூறி கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் வெற்ற மோடி அரசு அதனை நிறைவேற்ற தவறிவிட்டது. ஆனால், அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என மோடி கூறிவருவதை மக்கள் நம்பவில்லை என மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார். #ManmohanSingh
    காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். #ManmohanSingh #PMModi
    புதுடெல்லி:

    உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து நாட்டில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடி மவுனம் காத்ததை விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் எனக்கு அளித்த அறிவுரைகளை பின்பற்றி தற்போது வாய்திறந்து பேசுங்கள்” என மன்மோகன் குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த வாரம் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பேசும் போது, காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து மோடி பேசியிருந்தார். குறிப்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு, பகத்சிங் உள்ளிட்டவர்களை சிறையில் சென்று சந்திக்கவில்லை என கூறினார். ஆனால், அது பொய்யான குற்றசாட்டு என பல வரலாற்று ஆசிரியர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.


    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசுகிறார். இது பிரதமர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தகுதியானது அல்ல” என அதில் மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேற்கண்ட புகார் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமரிடம் கேட்டறிய வேண்டும் என மன்மோகன் சிங் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். #ManmohanSingh #PMModi
    ×