செய்திகள்

காங். தலைவராக விரைவில் ராகுல் காந்தி நியமனம்: சோனியா காந்தி

Published On 2017-10-13 16:05 GMT   |   Update On 2017-10-13 16:05 GMT
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுபேற்பார் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுபேற்பார் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ள சோனியா காந்தியிடம், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி எப்போது பொறுப்பேற்ப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் எல்லாம் நடக்கும் என்று கூறினார்.

ஏற்கனவே, ஜம்மு, ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News