உள்ளூர் செய்திகள்
.

ஆம்புலன்ஸ் டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை

Published On 2022-05-16 09:32 GMT   |   Update On 2022-05-16 09:32 GMT
குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கியவர்களை சில தனியார் மருத்துவமனைகளில் பாதிக்கப் பட்டவர் விருப்பமில்லாமல் சேர்ப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி ஆம்புலன்ஸ் டிரைவர்களை அழைத்து போலீசார் ஆலோசனை நடத்தினர். 
கூட்டத்துக்கு இன்ஸ்பெக்டர் ரவி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில்,  விபத்தில் சிக்கியவர்களுக்கு நீங்கள் தான் கடவுள் போன்றவர்கள். அந்த சமயத்தில் பணம் தான் பெரிது என செயல்பட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சேர்த்து மேலும் மேலும் அவர்களுக்கு துன்பத்தை தரக்கூடாது. 
அவர் விருப்பப் பட்டால் அழைத்து செல்லலாம். நோய்வாய் பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், உயிருக்கு போராடுபவர்கள் என இது போன்ற நபர்களிடம் வாடகையை நியாயமாக கேட்டு பெறுங்கள் என்றார். 
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, இளங்குமரன், சிவகுமார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பிரகாஷ், யுவராஜ், கார்த்தி, சந்தோஷ்குமார், தர்மராஜ், மணி, ராஜ்குமார், வினோத்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News