உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் களை இழந்த சுற்றுலா தலங்கள்
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் களை இழந்தன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, மேட்டூர், முட்டல், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, பூலாம்பட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த இடங்களில் வழக்கமாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மேட்டூர் பூங்கா மூடப்பட்டு உள்ளது. மேலும், ஏற்காடு, முட்டல், குரும்பப்பட்டியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இன்று ஊரடங்கு காரணமாக இந்த சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தன. பூலாம்பட்டியில், விசைப் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலா தலங்களை நம்பி வியாபாரம் செய்த கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டனர்.