உள்ளூர் செய்திகள்
பாளை அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் தங்க நகை மாயம்
பாளை அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை அருகே உள்ள முன்னிர்பள்ளத்தை அடுத்த மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலையா. விவசாயி. இவரது மனைவி முப்புடாதி (வயது 52). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 4 மகன்களும் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.
பாலையா வீட்டு பீரோவில் 20 பவுன் எடையுள்ள தங்க நகைகள் வைத்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு அணிவதற்காக, பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளனர். காணாமல் போன தங்க நகைகளின் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும்.
பாலையா குடும்பத்தினர் வெளியில் சென்ற போது, யாராவது கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து பீரோவில் உள்ள தங்க நகைகளைத் திருடினார்களா? அல்லது வீட்டிற்கு வந்த உறவினர்கள் யாரேனும் நகையை அபேஸ் செய்தார்களா? என்று தெரியவில்லை.
இதுகுறித்து முப்புடாதி முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை எப்படி மாயமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை அருகே உள்ள முன்னிர்பள்ளத்தை அடுத்த மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலையா. விவசாயி. இவரது மனைவி முப்புடாதி (வயது 52). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 4 மகன்களும் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.
பாலையா வீட்டு பீரோவில் 20 பவுன் எடையுள்ள தங்க நகைகள் வைத்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு அணிவதற்காக, பீரோவை திறந்து நகைகளை பார்த்துள்ளனர். காணாமல் போன தங்க நகைகளின் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆகும்.
பாலையா குடும்பத்தினர் வெளியில் சென்ற போது, யாராவது கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து பீரோவில் உள்ள தங்க நகைகளைத் திருடினார்களா? அல்லது வீட்டிற்கு வந்த உறவினர்கள் யாரேனும் நகையை அபேஸ் செய்தார்களா? என்று தெரியவில்லை.
இதுகுறித்து முப்புடாதி முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகை எப்படி மாயமானது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.