தமிழ்நாடு

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை-மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

Published On 2024-05-26 06:06 GMT   |   Update On 2024-05-26 06:06 GMT
  • ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
  • கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

கோவை:

கோடை முடிந்து ஊர்களுக்கு திரும்ப வசதியாக கோவை-மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டி எண் 06041 மங்களூரு சென்ட்ரல்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற ஜூன் 1,8,15, 22,29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு கோவை வந்தடையும்.

மறுமார்க்கமாக வண்டி எண் 06042 கோவை-மங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் ஜூன் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், சொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News