தமிழ்நாடு செய்திகள்
Sasikala | கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா
- ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்து இருந்தார்.
- சசிகலா பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் கட்சியை தொடங்கிய சசிகலா பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்து இருந்தார்.
இந்த நிலையில் கட்சியின் பெயரை சசிகலா இன்று அறிவித்தார்.
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என கட்சி பெயரை சசிசலா அறிவித்தார். தொண்டர் ஆரம்பித்த கட்சியில் சசிகலா தன்னை இணைத்துக் கொண்டார்.