தமிழ்நாடு செய்திகள்

TN Assembly Election | வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி - சசிகலா

Published On 2026-03-13 12:46 IST   |   Update On 2026-03-13 12:46:00 IST
  • ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது.
  • தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டவர் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24-ந்தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்த சசிகலா இன்று கட்சியின் பெயரை அறிவித்தார். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் (அஇபுதமமுக) என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். சசிகலா தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலா கூறியதாவது:

* ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அனைத்தும் தலைகீழாக மாறி விட்டது.

* தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டவர் எம்.ஜி.ஆர்.

* வரும் சட்டசபை தேர்தலில் அ.இ.பு.த.ம.மு.க. தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவேன்.

* வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டியிடுவேன்.

* ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவேன்.

வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு நாங்கள் எப்போதும் தோப்பு என அவர் விளக்கம் அளித்தார்.

Tags:    

Similar News