தமிழ்நாடு

இதுவரை தேர்தல் நடைபெற்ற இடங்களில் 310 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெறும்- எல்.முருகன் பேட்டி

Published On 2024-05-26 03:44 GMT   |   Update On 2024-05-26 03:44 GMT
  • தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.
  • தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.

திருச்சி:

மத்திய மந்திரி எல்.முருகன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் இதுவரை நடந்து முடிந்த தொகுதிகளில் 310 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான சாதகமான நிலை உள்ளதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டங்களில் நடைபெற உள்ள தேர்தல்களிலும் சேர்த்து மொத்தம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஒரு வரலாற்றுச் சாதனையை பாரதிய ஜனதா செய்ய உள்ளது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு திருப்பம் நடைபெற உள்ளது, யாரும் இதுவரை எதிர்பாராத வண்ணம் அரசியல் புரட்சி இந்த தேர்தலில் நடைபெற இருக்கின்றது. வரும் 4-ம் தேதி உங்களுக்கே தெரியும். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாங்கள் சமர்ப்பிப்போம்.

தமிழக முதலமைச்சர், மத்தியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என்று கூறி வருகிறார். அது அவர்களுடைய பகல் கனவாகவே இருக்கப்போகிறது. காங்கிரஸ் 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. தி.மு.க மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது.

பிரதமர் மோடி பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடையே பொய்யாக திரித்து பேசி வருகிறார். பிரதமர் என்ன பேசினார் என்பதை முதலில் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் தமிழர் கட்சி சீமான் என்னை விட அதிகமாக அவர்கள் வெற்றி பெற்று விட்டால் நான் கட்சியை கலைத்து விடுகிறேன் என சொல்லி உள்ளார் என்ற கேள்விக்கு, அவர் கட்சியைக் கலைக்க தயாராகி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News