செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தியவர் கைது

Published On 2020-09-23 15:20 GMT   |   Update On 2020-09-23 15:20 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் போலீசார் நேற்று முன்தினம் ராமஞ் சேரி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு டிராக்டரை போலீசார் கைப்பற்றினர். மேலும் மணல் கடத்தியதாக திருத்தணியை அடுத்த புட்லூரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News