செய்திகள்
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சேலம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவரை விமர்சித்ததன் புகாரின் பேரிலே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிகூட உண்மை இல்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். ஆர்.எஸ். பாரதி பேசிய போதே மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. தமிழகம் கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவரை விமர்சித்ததன் புகாரின் பேரிலே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிகூட உண்மை இல்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். ஆர்.எஸ். பாரதி பேசிய போதே மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப்படுகின்றன.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. தமிழகம் கேட்ட தொகையில் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.