இந்தியா

பெங்களூருவில் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published On 2024-04-26 11:30 GMT   |   Update On 2024-04-26 11:30 GMT
  • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு தெற்கு தொகுதியில் 80 சதவீத பாஜகவினர், 20 சதவீத காங்கிரஸ் கட்சியினர் உள்ளதாக வீடியோ பதிவிட்டிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், 80 சதவீதம் உள்ள பாஜகவினர் 20 சதவீதம் தான் வாக்களிக்கின்றனர். ஆனால் 20 சதவீதம் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 80 சதவீதம் வாக்கப்பதாக கூறினார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்த்ல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், ஜெயநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News