செய்திகள்
தொழிலாளி மரணம்

கோவை அன்னூரில் குடிபோதையில் கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி

Published On 2020-01-25 10:07 GMT   |   Update On 2020-01-25 10:07 GMT
கோவை அன்னூரில் குடிபோதையில் கிணற்றில் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை அன்னூரை சேர்ந்தவர் மகேந்திரன் (51) தொழிலாளி.இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மகேந்திரன் அருகில் உள்ள தோட்டத்துக்கு குடிபோதையில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கோவை பேரூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் தங்கவேல் (51). கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த தங்கவேல் சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பி. என். புதூரை சேர்ந்தவர் மருதாச்சலம். இவரது மனைவி ராஜம்மாள் (70). இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ராஜம்மாளுக்கு விபத்து ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்றார்.

ஆனால் விபத்து காரணமாக ஏற்பட்ட வலியை அவரால் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த ராஜம்மாள் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடர் குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 19). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.

இதனால் மனவேதனை அடைந்த சிவபிரசாத் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News