செய்திகள்
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணி - கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு விடுத்த திமுக
சென்னையில் நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு தி.மு.க. இன்று நேரில் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ம் தேதி தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, அக்கட்சியின் பொதுச் செயலாளர்களும், நிர்வாகிகளும் உடனிருந்தனர்.