செய்திகள்
கைது

நிலத்தகராறில் வாலிபரை சரமாரியாக தாக்கிய விவசாயி கைது

Published On 2019-12-03 15:54 GMT   |   Update On 2019-12-03 15:54 GMT
ஊத்தங்கரை அருகே நிலத்தகராறில் வாலிபரை சரமாரியாக தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள காரப்பட்டு அருகே முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பிரபாகரன் (வயது27). இவருக்கும் இவரது உறவினர்களான அண்ணாமலை(47) மற்றும் அவரது சகோதரர்கள் சங்கர் (38), ராமு (35) என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று பிரபாகரனுக்கும், அண்ணாமலை, சங்கர் மற்றும் ராமு ஆகிய 3 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அண்ணாமலை, சங்கர், ராமு ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

படுகாயமடைந்த பிரபாகரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பிரபாகரன் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் அண்ணாமலை உள்பட 3 பேர் மீதும் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்து ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சங்கர் மற்றும் ராமுவை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News