செய்திகள்
தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து- கணவருக்கு வலைவீச்சு
தூத்துக்குடியில் மது குடித்து விட்டு வந்த தகராறில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெர்மல்நகர் காதர் மீரான்நகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவசக்தி (28). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முத்துராமலிங்கத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் தினமும் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
இதேபோல் நேற்றும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனை சிவசக்தி கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம் கத்தியால் மனைவியை குத்தினார். இதனால் படுகாயமடைந்த சிவசக்தி தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தெர்மல்நகர் போலீசார் தப்பியோடிய முத்துராமலிங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.