செய்திகள்
ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் - முதல்வர் பழனிசாமி மெரினாவில் ஆய்வு
மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டு வரும் நினைவு மண்டப பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு நடத்தினார்.
சென்னை:
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.50.80 கோடியில் அந்த நினைவு மண்டபம் கட்டப்படுகிறது
அதற்கான கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி அங்கு நடைபெற்று வரும் நினைவிட கட்டுமான பணிகள் குறித்து கேட்டறிந்தார்.