செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - நாளை காலை திமுக தேர்தல் அறிக்கை வெளியாகிறது

Published On 2019-03-18 13:56 GMT   |   Update On 2019-03-18 13:56 GMT
பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணியளவில் வெளியாகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்திக்கிறார். #LSPolls #DMK #MKStalin #Manisfesto
சென்னை:

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் திமுக தலைமையில்காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைமை நேற்று அறிவித்தது.



இந்நிலையில், திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என இன்று மாலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களை சந்திப்பார் என அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMK #MKStalin #Manisfesto
Tags:    

Similar News