உலகம்

மகளுக்காக கைதட்டாததால் மாணவர்களை மிரட்டிய கல்வி அதிகாரி பணி நீக்கம்

Published On 2024-05-06 10:13 GMT   |   Update On 2024-05-06 10:13 GMT
  • கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ்.
  • மரியன் கிம் பெல்ப்ஸ் விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாவட்ட கல்வி கண்காணிப்பாளராக இருந்து வருபவர் மரியன் கிம் பெல்ப்ஸ். இவரது மகள் விளையாட்டில் சிறந்து விளங்கினார்.

இதை பாராட்டி அவருக்கு அங்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மரியன் கிம் பெல்ப்சும் கலந்து கொண்டார்.

மகள் விழா மேடையில் கவுரப்படுத்தும்போது அங்கு திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் பெரிய அளவில் கைத்தட்டி உற்சாகப்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் மரியன் கிம் பெல்ஸ் கடும் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர் விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் கல்வி அதிகாரிகளிடம் புகார்கள் கொடுத்தனர். இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News