உலகம்
துருக்கியில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 115 பேர் கைது
- ஐ.எஸ். அமைப்பை வேரறுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
- ராணுவத்தினர் அந்த நாட்டில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஈராக்கில் தனிநாடு கோரி போராடி வரும் ஐ.எஸ். அமைப்பு உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இந்த ஐ.எஸ். அமைப்பை வேரறுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான துருக்கியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகுவிமரிசையாக நடந்து வருகின்றன.
இந்தநிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புத்தாண்டு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அந்தநாட்டின் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவத்தினர் அந்த நாட்டில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 115 பேர் கைது செய்யப்பட்டனர்.