செய்திகள்
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை காரில் கடத்தி தாக்கிய கும்பல்
கோவை அருகே காதல் திருமணம் செய்த வாலிபரை பெண்ணின் அண்ணன் காரில் கடத்தி தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கிருஷ்ணகிரி மாவட்டம் சித்திரகள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). தொழிலாளி.
இவர் அதேபகுதியை சேர்ந்த ரகிஷா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கோவை வந்தனர். நண்பர்கள் உதவியுடன் சுங்கம் இந்திரா நகர்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தினர்.
மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காரில் வந்த ஒரு கும்பல் மணிகண்டனை கடத்தி, அடித்து உதைத்து தாக்கியது. இந்நிலையில் கார் புளியம்பட்டி அருகே சென்ற போது மணிகண்டன் காரில் இருந்து கீழே குதித்து தப்பினார். கும்பல் தாக்கியதில் காயமடைந்த மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் புளியம்பட்டி போலீசார் கோவை ராமநாதபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், மணிகண்டனை மீட்டு கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.
காதலுக்கு ரகிஷாவின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அவரது நண்பர்கள் 3 பேர் தான் காரில் வந்து தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக மணிகண்டன் போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கிருஷ்ணகிரி மாவட்டம் சித்திரகள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). தொழிலாளி.
இவர் அதேபகுதியை சேர்ந்த ரகிஷா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கோவை வந்தனர். நண்பர்கள் உதவியுடன் சுங்கம் இந்திரா நகர்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தினர்.
மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காரில் வந்த ஒரு கும்பல் மணிகண்டனை கடத்தி, அடித்து உதைத்து தாக்கியது. இந்நிலையில் கார் புளியம்பட்டி அருகே சென்ற போது மணிகண்டன் காரில் இருந்து கீழே குதித்து தப்பினார். கும்பல் தாக்கியதில் காயமடைந்த மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் புளியம்பட்டி போலீசார் கோவை ராமநாதபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், மணிகண்டனை மீட்டு கோவை அழைத்து வந்து விசாரித்தனர்.
காதலுக்கு ரகிஷாவின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அவரது நண்பர்கள் 3 பேர் தான் காரில் வந்து தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக மணிகண்டன் போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews