search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் திருமணம்"

    • டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது
    • நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்

    நடிகர் தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதை தொடர்ந்து 'ஆரம்பம்', 'காஞ்சனா 2' உள்பட பல படங்களில் அவர் நடித்து உள்ளார்.

    தற்போது இந்தி படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். பிரபல நடிகர் ஷாருக்கானுடன் ஜோடியாக நடித்த 'டங்கி' படம் சமீபத்தில் வெளியானது.

    இந்நிலையில் 'டென்மார்க்' நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் என்பவரை பல ஆண்டுகளாக டாப்ஸி காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் இந்த மாதம் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.





    இந்நிலையில் டாப்ஸி காதல் திருமணம் கடந்த 23-ந் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இந்த திருமணம் நடந்துள்ளது.

    இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், சினிமா பிரபலங்கள் பங்கேற்று உள்ளனர். இதையடுத்து நடிகை டாப்ஸிக்கு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்தவர்.
    • 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம்.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.

    தொடர்ந்து, சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

    தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

    இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை இன்று கரம் பிடித்தார்.

    கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.

    இதைதொடர்ந்து, திருமண தேதி இன்று குறிப்பிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது. 

    கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலலந்துக் கொண்டனர்.

    திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இளம்பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தலைமறைவாக இருந்த பெற்றோரை பட்டுக்கோட்டை காவல்துறை கைது செய்தது.

    கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை பெருமாள், தாய் ரோஜாவை கைது செய்த காவல்துறை, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன்- ஐஸ்வர்யா சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஐஸ்வர்யாவை துன்புறுத்தி பெற்றோர் கொலை செய்ததாக கணவன் நவீன் புகார் அளித்த புகார் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர்.
    • மகள் வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    மும்பை:

    மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், அந்த வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் யார்? என்ற அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நவிமும்பை பன்வெல் பகுதியில் புதருக்குள் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற பன்வெல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    2 பேரும் ஒரே மாதிரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன்-மனைவியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், கொலையான பெண் மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த கோரா கான்(வயது50) என்பவரின் மகள் குல்னாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கோரா கானை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

    அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் குட்டு அம்பலமானது. அதாவது, அவரது மகள் குல்னாசை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கரண் ரமேஷ் சந்திரா(22) என்ற வாலிபர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. தனது மகள் வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இதற்கிடையே காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில் கோரா கான் அவர்களை தொடர்பு கொண்டு நைசாக பேசியுள்ளார். மகள், மருமகனையும் மும்பை வரவழைத்து உள்ளார். பின்னர் தனது மகன் சல்மான் மற்றும் சல்மானின் நண்பர் முகமது கான் ஆகியோருடன் சேர்ந்து மகள் குல்னாசையும், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    இந்த படுகொலையை மறைப்பதற்காக அவர்கள் கரண் ரமேஷ் சந்திரா உடலை மும்பை மான்கூர்டில் உள்ள கிணற்றிலும், குல்னாஸ் உடலை நவிமும்பை பன்வெல் காட்டுப்பகுதியிலும் வீசி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கோரா கான், சல்மான், முகமது கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக 3 சிறுவர்களையும் போலீசார் பிடித்தனர். இவர்கள் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலையாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு
    • ரம்யா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தர்மபுரி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாைதயன். இவரது மகள் ரம்யா (30),

    இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஓமலூரை சேர்ந்த சீனிவாச பெருமாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் மாதையன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ரம்யா தனது கணவருடன் ஓமலூரை அடுத்த காமாண்டபட்டியில் வசித்து வந்தார். மேலும் ரம்யா பெற்றோர் வீட்டிற்கு வந்து தாய் ராணியிடம் அடிக்கடி பணம் பெற்று செல்வது வழக்கம், அதன்படி கடந்த 10-ந் தேதி பணம் பெற்று சென்றார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிைடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் மேலும் அவரது மாமியார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரம்யா வீட்டில் இருந்த தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே ரம்யாவின் தந்தை மாதையன் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உ ள்ளார். அதன் பேரில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிள்ளைகளின் மனதை அறிந்து இருவீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.
    • காதலின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் நசீராதாவூத். திண்டுக்கல்லில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் பெங்களூரில் மருத்துவம் பயின்று மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

    அங்கு டாக்டராகவும், சமூக செயற்பாட்டாளராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயரான பில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

    இருந்தபோதும் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டில் இது குறித்து தெரிவித்தனர். தங்கள் பிள்ளைகளின் மனதை அறிந்து இருவீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த காதலர்கள் காதலின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்னர் இருவீட்டாரும் இணைந்து கொடைக்கானலில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி திண்டுக்கல் டாக்டர் நசீராவுக்கும், அமெரிக்க என்ஜினீயர் பில் என்பவருக்கும் காலையில் கொடைக்கானலில் உள்ள தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மதிய வேளையில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டாரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் என குறைந்த அளவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. ஜாதி, மதம், மொழி, இனங்களை கடந்து அமெரிக்காவை சேர்ந்த என்ஜினீயரை திண்டுக்கல்லை சேர்ந்த டாக்டர் திருமணம் செய்த சம்பவம் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
    • பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா (வயது21). இவரும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(24) என்பவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஆஷா புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து விட்டு சென்னையில் மகளிர் விடுதியில் தங்கி மொபைல் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.

    அதேபோல் கல்லூரி படிப்பை முடித்த ஐயப்பன் சேலத்தில் உள்ள தனியார் டவர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ஐயப்பன் சேலத்திலிருந்து அவ்வப்போது சென்னை சென்று ஆஷாவை சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதில் ஆஷா கர்ப்பம் அடைந்தார்.

    இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனிடம் ஆஷா கேட்டிருக்கிறார்.

    இதனையடுத்து ஐயப்பன் அவரது பெற்றோரிடம் ஆஷாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    ஆஷா மாற்று சமுதாயத்தை சேர்ந்த பெண் என்பதால் ஐயப்பனின் பெற்றோர் அவரை திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனை அறிந்த 9 மாத கர்ப்பிணியான ஆஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து திருமயம் மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு விசாரணை நடத்தினார்.

    அப்போது ஐயப்பன் ஆஷாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். ஆனால் ஐயப்பனின் பெற்றோர் ஆஷாவை திருமணம் செய்தால் வீட்டிற்கு அவர்கள் வரக்கூடாது என்றனர்.

    இதையடுத்து பெண் வீட்டார் திருமயம் கலிய பெருமாள் கோவிலில் ஆஷாவுக்கும் ஐயப்பனுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    • புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார்.
    • நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி.

    இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார். நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வருவார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாகலட்சுமி 6 மாத கர்ப்பமானார்.

    இதனைதொடர்ந்து நாகலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு நிதீஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துவிட்டு நாகலட்சுமியை விட்டு விலக ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி விருத்தாசலம் பூவனூரில் உள்ள நிதீஷ்குமார் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். நிதீஷ்குமார் வீட்டின் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து நாகலட்சுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார். இதனைதொடர்ந்து இருவீட்டாரின் முன்னிலையில் விருத்தாசலம் வண்ண முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குறிஞ்சி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரும் தீபன் (27) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சென்னையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    தீபனின் பெற்றோர் ராஜேஸ்வரிடம் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று விட்டார்.

    இந்த நிலையில் தீபனின் பெற்றோர் அவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    பின்னர் தீபனுக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது டைரியில் கணவர் தீபன் 2-வது திருமணம் செய்து கொண்டத்தால் மன உளைச்சலில் உள்ளேன் என்று எழுதி வைத்துவிட்டு வீட்டின் அறையில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் இன்று அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர்.

    அரக்கோணம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ராஜேஸ்வரி சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த அரக்கோணம் இன்ஸ்பெக்டர் பாரதி மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
    • கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    திருமங்கலம்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சாத்தங்குடியை சேர்ந்த ஜீவானந்தம் மகள் சினேகா (21) என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் பிள்ளைகளின் காதலை ஏற்க மறுத்து விட்டனர். பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் காதல் நிறைவேறாது என்று எண்ணிய காதல் ஜோடி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியது.

    பின்னர் அவர்கள் கோவையில் பெற்றோருக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அங்கேயே ஒரு வாடகை வீட்டில் தனிக்குடித்தனமும் வசித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து இரு வீட்டாருக்கும் இதுகுறித்து தெரியவந்தது. இந்த நிலையில் மகனை வீட்டிற்கு வருமாறு அவரது தந்தை மணி அழைத்தார்.

    ஒரு வழியாக தங்களது திருமணத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதாக நினைத்த பிரியவரதன் மகிழ்ச்சி பெருக்கோடு தனது காதல் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர்கள் 3 நாட்கள் தங்கி இருந்தனர். விருந்து, உபசரிப்பு என புதுமண ஜோடி திளைத்து போனார்கள்.

    அதே சமயம் அங்கு சினேகாவின் தந்தை ஜீவானந்தம், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் 2 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களும் தங்கள் பங்கிற்கு மருமகனையும், மகளையும் தங்கள் ஊருக்கு விருந்துக்காக அழைத்து செல்ல விரும்புதாக மணியிடம் கூறி உள்ளனர்.

    அதற்கு சம்மதித்த மணி, மகன் பிரியவரதன், மருமகள் சினேகா ஆகியோருடன் தனது மனைவி சின்னம்மாளையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார். அவர்கள் காரில் சினேகாவின் சொந்த ஊரான சாத்தங்குடிக்கு புறப்பட்டனர்.

    மேலஉரப்பனூர் கண்மாய் அருகே சென்றபோது காரின் வேகத்தை குறைத்து, பிரியவரதன் அவரது தாய் சின்னம்மாள் ஆகிய இருவரையும், காரில் இருந்த சினேகாவின் தந்தை ஜீவானந்தம் மற்றும் அவரது உறவினர்கள், காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    அவர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களிடமிருந்து செல்போனையும் பறித்துக்கொண்டு சினேகாவை மட்டும் காரில் அழைத்து சென்றனர். இதையடுத்து கடத்தி செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டு தருமாறு திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பிரியவரதன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
    • இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    கோவை:

    மதுரையை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவர் உடுமலை பேட்டையில் உள்ள ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கு வேறு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே வாலிபர் வேறுமதத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இளம்பெண் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனது காதலனுடன் சிவகாசிக்கு சென்றார். அங்குள்ள கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து 2 பேரும் ஆலங்குளம் என்ற ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி இளம்பெண்ணின் பெற்றோர் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காதலனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை மீட்ட னர். பின்னர் தங்கள் மகளை திருமணம் செய்ய அவரது பெற்றோர் வாலிபருக்கு சில நிபந்தனைகளை விதித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

    அதன் பின்னர் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் இருந்தனர். மேலும் இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகளுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மணமகனை தேடி வந்தனர்.

    இதுகுறித்து இளம்பெண் அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். எப்படியாவது தன்னை அழைத்து செல்லுமாறு கூறினார். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் அவரை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவில் வைத்து மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

    அதன்பின்னர் காதல் ஜோடி மாலையுடன் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அபரஜிதா சிங் சின்வார். இவர் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டிணம் இணை கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கேடரை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திர குமார். அபராஜிதா சிங் சின்வாரும், தேவேந்திர குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் எளிமையாக திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி தேவேந்திரகுமார் நேற்று மச்சிலபட்டினம் வந்தார்.

    இவர்களது திருமணம் மச்சிலிப்பட்டணம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

    மாவட்ட பதிவாளர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து, திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள் குட்லவல்லேறு மண்டலம், வேமாவரத்தில் உள்ள கொண்டலம்மா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

    ×