என் மலர்
நீங்கள் தேடியது "சாதிய வன்கொடுமை"
- மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது.
- தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர் காவல் துறையினரின் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும், காவல்துறையும்.
4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும், ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக - அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது.
"அரசியலில் நாம் 'ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு' என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது" என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்.
இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
- அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.
ஒடிசாவில் காதலித்து திருமணம் செய்த இளம் ஜோடியை சிலர் காளைகளைப் போல கலப்பையில் கட்டி வைத்து வயலை உழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கு தண்டனையாக, அவர்கள் நுகத்தடியில் கட்டி வைக்கப்பட்டு காளைகளைப் போல வயலை உளுத்துள்னர். அப்போது சிலர் அவர்களை அடித்து முள் குச்சிகளால் குத்துவதும் வெளியான வீடியோவில் காணப்பட்டது.
இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் சண்முகநாதன், ஆறுமுகம், சந்திரசேகர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு பிரிவினரால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும், மானாமதுரை காவல் உட்கோட்டத்தை சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொது அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மானாமதுரையில் இமானுவேல் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சங்கர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெகதீசன், முருகானந்தம், ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தியாகி இமானுவேல் பேரவை மாநில பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, வேல்முருகன், புலி பாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.
முன்னதாக பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்ட மூவரது உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






