search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kachanatham murder"

    மானாமதுரையில் இமானுவேல் பேரவை சார்பில் கச்சநத்தம் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மானாமதுரை:

    திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் சண்முகநாதன், ஆறுமுகம், சந்திரசேகர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு பிரிவினரால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும், மானாமதுரை காவல் உட்கோட்டத்தை சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொது அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மானாமதுரையில் இமானுவேல் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் சங்கர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெகதீசன், முருகானந்தம், ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தியாகி இமானுவேல் பேரவை மாநில பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, வேல்முருகன், புலி பாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    முன்னதாக பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்ட மூவரது உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    கச்சநத்தம் கிராமத்தில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.#Thirumavalavan
    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28-5-2018 அன்று இரவு சாதிவெறியர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

    இந்த கொடூரத்தைக் கண்டித்து தொடர்ந்து 3 நாட்களாக மதுரையில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை 1-6-2018 அன்று நேரில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல் கூறினோம். சாதி ஒழிப்புக்கான கச்சநத்தம் களத்தில் பலியான ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

    காவல்துறை அதிகாரிகளும் இந்தப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இவ்வழக்கை காவல்துறையினரே விசாரிப்பது நீதி கிடைக்க ஏதுவாக அமையாது. எனவே, இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan
    ×