என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சநத்தம் படுகொலை சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்
Byமாலை மலர்4 Jun 2018 2:54 AM GMT (Updated: 4 Jun 2018 2:54 AM GMT)
கச்சநத்தம் கிராமத்தில் நடந்த படுகொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.#Thirumavalavan
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28-5-2018 அன்று இரவு சாதிவெறியர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த கொடூரத்தைக் கண்டித்து தொடர்ந்து 3 நாட்களாக மதுரையில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை 1-6-2018 அன்று நேரில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல் கூறினோம். சாதி ஒழிப்புக்கான கச்சநத்தம் களத்தில் பலியான ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
காவல்துறை அதிகாரிகளும் இந்தப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இவ்வழக்கை காவல்துறையினரே விசாரிப்பது நீதி கிடைக்க ஏதுவாக அமையாது. எனவே, இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 28-5-2018 அன்று இரவு சாதிவெறியர்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 3 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்த கொடூரத்தைக் கண்டித்து தொடர்ந்து 3 நாட்களாக மதுரையில் போராடிக்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களை 1-6-2018 அன்று நேரில் சந்தித்து விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல் கூறினோம். சாதி ஒழிப்புக்கான கச்சநத்தம் களத்தில் பலியான ஆறுமுகம், சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினோம்.
காவல்துறை அதிகாரிகளும் இந்தப் படுகொலையில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்கிற நிலையில் இவ்வழக்கை காவல்துறையினரே விசாரிப்பது நீதி கிடைக்க ஏதுவாக அமையாது. எனவே, இதனை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்படி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X