search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emanuel council demonstration"

    மானாமதுரையில் இமானுவேல் பேரவை சார்பில் கச்சநத்தம் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மானாமதுரை:

    திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் சண்முகநாதன், ஆறுமுகம், சந்திரசேகர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு பிரிவினரால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும், மானாமதுரை காவல் உட்கோட்டத்தை சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொது அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மானாமதுரையில் இமானுவேல் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட தலைவர் சங்கர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெகதீசன், முருகானந்தம், ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தியாகி இமானுவேல் பேரவை மாநில பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, வேல்முருகன், புலி பாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    முன்னதாக பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்ட மூவரது உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    ×