செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் பாதிப்பு இல்லை- கி.வீரமணி பேட்டி

Published On 2019-02-18 10:54 GMT   |   Update On 2019-02-18 11:42 GMT
பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் பாதிப்பு இல்லை என்று திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். #kveeramani #parliamentelection

ஸ்ரீவில்லிபுத்தூர்:

திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா மூழ்கும் கப்பல், வரும் பாராளுமன்ற தேர்தலில் நடிகர்களால் எந்த பாதிப்பும் இல்லை. ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர் கலைத்துறையில் மட்டுமே உள்ளார்.

திராவிடர் கழக சமூக நீதி மாநாடு, வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


இட ஒதுக்கீடு, சமூக நீதி குறித்த தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படுகின்றன. தேர்தலில் மக்களின் கடமைகள் என்ன என்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். #kveeramani #parliamentelection

Tags:    

Similar News