search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கி வீரமணி"

    • உதயநிதி திராவிட இயக்கம் என்ற கொள்கை ஜீவநதி யாவார்.
    • இளைஞர் பட்டாளம் நிச்சயம் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம்!

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் பெரியாரின் கொள்கைத் திறன் நிரம்பிய உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள் என்பது மகிழ்ச்சிக்குரிய, வாழ்த்துதலுக்குரிய கொள்கைக் காவல் நாள் ஆகும்.

    திராவிடர் இயக்கத்தின் தனிச் சிறப்பே, தந்தை பெரியார் காலத்திலிருந்து, கொள்கைக் குடும்ப உறவுகளாக்கி, பாசத்தை மறக்காது, தந்தை, அண்ணன், உடன்பிறப்பு என்ற வயது இடைவெளியோ, ஜாதி, மத, பால் அடையாளங்களோ, வேறுபாடுகளோ இல்லாமல் பழகிடும் நல்ல கொள்கைக் குடும்பமாக உருவாக்கமே!


    அதனை சிறப்பாக, கொள்கை எதிரிகளின் குலை நடுங்க செயல் வடிவமாய்ப் பேருரு கொள்கிறார்! "கொண்ட லட்சியத்திற்காக எந்த விலையும் கொடுப்பேனே தவிர, பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை" என்ற அவரது உறுதிக்கு முன் வைரக் கிரீடமானது வெகு சாதாரணம். ஒரு உண்மை சுயமரியாதைப் போராளியின் திராவிட தத்துவமும், இலக்கணமும், அடையாளமும் அதுதான். எனவே உதயநிதி திராவிட இயக்கம் என்ற கொள்கை ஜீவநதி யாவார்.

    சோதனை மிகுந்த, நாணயமற்ற, சூழ்ச்சி, சூதுமதியான ஆரியத்தை எதிர்த்து நிற்கும் களத்தில் அவரது இளைஞர் பட்டாளம் நிச்சயம் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம்!

    வயது ஏறுவது அவருக்கு மூப்பு அல்ல முதிர்ச்சியே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
    • தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் புதுவை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திராவிட கழக தலைவர் கீ.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை கவர்னர்களாக நியமித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நடத்த விடாமல் முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றினால் ஆளுகின்ற அரசுக்கு நற்பெயர் ஏற்படும் என்ற காரணத்தினால் கவர்னர்களை வைத்து போட்டி அரசாங்கம் நடத்துகின்றனர். இது சட்டவிரோதம்.

    அ.தி.மு.கவின் குடுமி கவர்னர் கையில் உள்ளது. ஊழல் பட்டியல் அவரிடம் உள்ளது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

    புதுவையில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைக்கப்பட்டதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு என்பது பூசணிக்காயை அல்ல பெரிய மலையை சோத்துக்குள் மறைப்பதாகும்.

    புதுவை மக்கள் பா.ஜனதாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. தற்போது தான் புரிந்து கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். ஒரு வேலை பழங்குடியின மக்களை புதுவையில் தரையில் அமர வைத்த சம்பவம் புதுவை மாடலாக இருக்குமோ.?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘இந்தியா’ கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன்.
    • தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு வர வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடிதம் எழுதி இருந்தார்.

    அதற்கு பதில் அளித்து கி.வீரமணிக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார் அதன் விவரம் வருமாறு:-

    சென்னை பெரியார் திடலுக்கு என்னை அழைத்ததற்காக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 'இந்தியா' கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கூட்டணி அரசியல் கூட்டணி என்பதை விட மேம்பட்டது.

    சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களை பிரித்தாளும் பா.ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும்.

    ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுய மரியாதையுடன், வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலைநோக்கு தான் பாதை அமைத்து தந்தது. நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பற்று, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவது போராடியது தான் அடித்தளமாக அமைந்துள்ளது.

    பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழி நடத்தட்டும். தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது.
    • 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பாக குலத்தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவா? என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேசியதாவது:-

    இந்த ஆட்சியில் ரூ.1200 கோடி செலவில் காலை சிற்றுண்டி தரப்படுகிறது. முந்தைய ஆட்சிகளில் கோவில்களில் புளியோதரை, தயிர் சாதம் தான் தரப்பட்டது. இப்பொழுது தான் குழந்தைகள் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள்.

    முன்பு சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே டாக்டர் என இருந்தது. அது ஒழிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவராக முடியவில்லை. புதிய கல்வி கொள்கையினால் 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் வைக்கப்படுகிறது. இவ்வளவு தேர்வு எழுதி மீண்டும் க்யூட் தேர்வில் பாஸ் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நீட் மற்றும் கியூட்டை மியூட் செய்வதற்குத்தான் நாங்கள் உள்ளோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் குலதொழில் கல்வி திட்டம் ஒழிந்த பின் விஞ்ஞானி ஆகியவர்கள். தாய் வீட்டு சீதனம் போல மாதம் ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்களுக்கு அது உதவித்தொகை இல்லை. உரிமை தொகையாக வழங்கப்படுகிறது.

    மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்தியாவை நாம் காப்பாற்றுகிறோம். அவர்கள் இந்தியா என்று கூறுவதற்கே பயப்படுகிறார்கள். இந்தியா என்கிற பெயர் அனைவரையும் இணைக்கிறது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மோடி திரிசூலத்தை கையில் வைத்துள்ளார். ஒன்று வருமானவரித்துறை, மற்றொன்று சி.பி.ஐ., 3-வது அமலாக்கத்துறை. இது அனைத்தும் மக்கள் முன்பு எடுபடாது. உங்களிடம் அதானி, அம்பானி உள்ளார்கள். மக்கள் எங்களோடு உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தி.மு.க.,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுவையில் தலித் பெண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
    • சாதியை ஒழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    மத்திய பா.ஜனதா அரசின் குலத்தொழிலை திணிக்கும் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் தொடர் பயண பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்துக்கு புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் குப்புசாமி வரவேற்றார். பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார்.

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

    மத்தியில் மக்கள் விரோத மோடி அரசு ஆட்சி செய்கிறது. அவர்கள் எதை சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ, அதை செய்யாமல், சொல்லாததையெல்லாம் செய்து வருகின்றனர்.

    சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை திரிசூலம் போல வைத்து ஆட்சி நடத்துகின்றனர்.

    புதுவையில் தலித் பெண் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நடிகை பல குற்றச்சாட்டுகள் கூறி பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளார்.

    பா.ஜனதாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சாதியை ஒழிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி. தென்னிந்தியாவில் பா.ஜனதாவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது. புதுவையில் ஒப்புக்குத்தான் ஆட்சி நடக்கிறது. கயிறு வேறு இடத்தில் உள்ளது. பொம்மலாட்ட பொம்மை போல புதுவை முதலமைச்சரை ஆட வைக்கிறார்கள்.

    இவ்வாறு கி.வீரமணி பேசினார்.

    • “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
    • விருது வருகிற 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்த வரும், 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேடினாலிஸ்ட் (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணிக்கு 2023-ம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

    "தகைசால் தமிழர்" விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட கி. வீரமணிக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
    • நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம்.

    சென்னை :

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வயதில் 90 ஆண்டையும், பொதுவாழ்க்கையில் 80 ஆண்டையும் கடந்துள்ளார். இதையொட்டி திராவிடர் கழகம் சார்பில் சென்னை தியாகராயநகரில் '90-ல் 80- அவர்தான் வீரமணி' என்ற தலைப்பில் பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது.

    விழாவிற்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பிரசார குழு செயலாளர் அருள் மொழி உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    விழாவில் கி.வீரமணி பேசியதாவது:-

    இந்த விழா என் வாழ்நாளில் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் நிகழ்ச்சி. இன்னும் அதிகமாக உழை என்பதை நீங்கள் எனக்கு சொல்வதாக எடுத்து கொள்கிறேன். இந்தியாவிலேயே ஒப்பற்ற முதல்-அமைச்சராக திகழும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். இதனால் என்னை மீறி உணர்ச்சி வசப்பட்டேன்.

    இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய தலைவராக அவர் வளர்ந்திருக்கிறார். திராவிட கொள்கையை தமிழகம் மட்டும்தான் ஏற்றுக்கொண்டது என்பதல்ல. பா.ஜ.க.வின் மக்கள் விரோத காவி கொள்கைக்கு மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரித்திருக்கிறது.

    இன்றைக்கு தமிழகம் கண்ட மாற்றம், வட மாநிலங்களிலும் நிகழும் என்பது நிரூபணமாகி இருக்கிறது. கருணாநிதி இறந்தவுடன் வெற்றிடம் ஏற்பட்டதாக சில வெற்றுவேட்டுகள் சொன்னார்கள். ஆனால் வந்தது வெற்றிடம் அல்ல, புதிய இந்தியாவுக்கான கட்டிடம். ஒரு பெரிய திருப்பம் நிகழ்ந்து வருகிறது. நிச்சயம் அது நல்ல திருப்பமாக இருக்கத்தான் போகிறது.

    நான் எந்த பிறந்தநாளிலும் விழாக்களில் பங்கேற்பது இல்லை. ஆனாலும் இந்த விழாவுக்கு நான் ஒப்புக்கொண்டதற்கு காரணம், ஒரு ரகசியத்தை வெளியிட வேண்டும் என்பதுதான். இந்த 90 என்பதே, எனக்கு அந்த 80 மூலமாக கிடைத்ததுதான். அந்த 80 இல்லையென்றால் 90 கிடையாது. இது களத்தில் உள்ள போராளிகள் வரலாறு. எனவேதான் இந்த விழாவுக்கு ஒப்புக்கொண்டேன். இந்த விழாவில் 90 ஆக வந்தாலும், 20 ஆகவே திரும்புவேன்.

    அண்ணா பங்கேற்ற கூட்டத்தில் எனது முதல் பேச்சை மனப்பாடம் செய்து படித்தேன். பின்னர் வெளியூர்களுக்கு பேச சென்றேன். அரை டிக்கெட் ஆசாமியாக வளர்ந்தேன். நான் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்ததற்கு பெரியார் என்ற மாபெரும் தத்துவம்தான் காரணம். அந்த தத்துவமே என்னை ஆளாக்கியது.

    பெரியார் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக நாம் இன்னும் உழைக்க வேண்டும். என் வாழ்நாளில் பதவியோ, பொறுப்போ முக்கியமாக நினைத்தது அல்ல. தோழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பும், பாசமும்தான் முக்கியம். அதுவே எல்லாவற்றிலும் மகத்தானது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில், 'அகவை 90-ல் ஆசிரியரின் 80 ஆண்டு பொதுத்தொண்டு' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

    • தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது.
    • முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று தி.க. தலைவர் கி. வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சட்ட மாமேதை அம்பேத்கரும், பெரியாரும் இணைந்து தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு குறித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    பட்டுக்கோட்டை தாலுகா ஆழம்பள்ளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம் மூலம் தீண்டாமை ஒழிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்பது அரசியல் சட்டத்தில் ஏட்டளவில் உள்ளது. முழுமையாக தீண்டாமை கொடுமை நீங்க வேண்டும்.

    சில இடங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சுடுகாட்டுக்கு கூட பாதை கிடையாது. தற்போது தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி மூலம் தீண்டாமை கொடுமை படிப்படியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அம்பேத்கர் வகுத்த கொள்கை மற்றும் அவரை நாம் புரட்சியாளராக தான் பார்க்கிறோம். ஆனால் பா.ஜ.க.வோ அம்பேத்கர் பெயரை அரசியல் வாக்கு வங்கியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.
    • ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த போட்டியில் கூறி இருப்பதாவது:

    தமிழக கவர்னர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே கருதுகிறார். மீண்டும் தற்போது கூட்டப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டம் 200-வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் .

    என்.எல்.சி விவகாரம் குறித்து தமிழக அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அதை ஒரு அரசியல் கிளர்ச்சியாக மாற்றாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். நிச்சயம் தமிழக அரசு செய்யும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயணம் ஈரோட்டில் 3-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.
    • அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பயணம் ஈரோட்டில் நாளை (3-ந்தேதி) தொடங்கி 10-ந்தேதி கடலூரில் நிறைவடைகிறது.

    இந்த பரப்புரை பயணத்தில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

    குமாரபாளையத்தில் நாளை மாலை 5 மணிக்கு தொடங்கப்படுகின்ற பரப்புரை பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஈரோட்டில் மாலை 7 மணிக்கு நடக்கிறது. அனைத்து ஊர்களிலும் மாலை 5 மணி மற்றும் 7 மணிக்கு கூட்டங்கள் நடக்கின்றன. குன்னூரில் மட்டும் பிற்பகல் 3 மணிக்கு பரப்புரை கூட்டம் நடக்கிறது.

    கட்சி, ஜாதி, மத வேறுபாடுகளை கடந்து நடைபெறும் இந்த பரப்புரை பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு தரும்படி திராவிடர் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அண்ணாவின் நினைவு நாளில் கி.வீரமணி திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
    • மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கை மூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மதச்சார்பற்ற ஜனநாயகத்தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரது கட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த மதவெறித் தீயை அணைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை கூடக் கிடையாது என்பது எவ்வகையில் நியாயம்.
    • ப.சிதம்பரத்திற்கு கால் முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த அடாத செயல்.

    சென்னை:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சியின் 'திரிசூலங்களில்' ஒன்றான அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு அழைத்து நேற்று 11 மணிநேரம் விசாரணை நடத்தியது. இன்றும் நடத்துவதை எதிர்த்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி ஜனநாயக வழியில் அவர்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர்.

    டெல்லித் தலைநகரில் நடந்த அறப்போராட்டத்தில், தேவையற்ற தள்ளுமுள்ளு நெருக்கடியில் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் நண்பர் ப.சிதம்பரத்திற்கு கால் முறிவு ஏற்படுத்தும் அளவுக்கு, காவல்துறை நடந்துகொண்டது வன்மம் நிறைந்த அடாத செயல் ஆகும்.

    இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் உரிமை கூடக் கிடையாது என்பது எவ்வகையில் நியாயம் என்பதை ஒன்றிய உள்துறையின் அங்கமாக உள்ள டெல்லி காவல்துறையினரிடம் கேட்டு, நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் விரைவில் குணமடைய விழைகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×