செய்திகள்
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தப்பட்ட 8¼ கிலோ கஞ்சா பறிமுதல்- வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்தப்பட்ட 8¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, மேலூர், செக்கானூரணி, கருப்பாயூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் மதுரை நகர் ஆகிய பகுதிகளில் சமூக விரோதிகளால் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் இன்று காலை பஸ் நிலையப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது.
உடனே போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த சிவா என தெரியவந்தது.
இவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து உசிலம்பட்டியில் உள்ள சிலரிடம் கொடுக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம், பேரையூர், உசிலம்பட்டி, மேலூர், செக்கானூரணி, கருப்பாயூரணி, சோழவந்தான், வாடிப்பட்டி மற்றும் மதுரை நகர் ஆகிய பகுதிகளில் சமூக விரோதிகளால் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் இன்று காலை பஸ் நிலையப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது.
உடனே போலீசார் வாலிபரை கைது செய்து விசாரித்ததில், அவர் உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த சிவா என தெரியவந்தது.
இவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து உசிலம்பட்டியில் உள்ள சிலரிடம் கொடுக்க இருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.