வால்பாறையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளம்பெண் தற்கொலை
வால்பாறை:
வால்பாறை அருகே உள்ள சோலையார்எஸ்டேட் இரண்டாவது பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மனைவி சித்ராதேவி(23).இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. சித்ராதேவி சோலையார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். செல்லத்துரை சோலையார் எஸ்டேட் பள்ளிக்கூடத்தில் தற்காலிக இரவு காவலராக பணிபரிந்து வருகிறார்.
இந்த நிலையில் செல்லத்துரை சித்ராதேவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி திட்டிக் கொண்டிருந்ததால் மனமுடைந்து எஸ்டேட் குடியிருப்புக்கு அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சித்ராதேவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற வால்பாறை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சித்ராதேவியின் உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.