செய்திகள்

கோடம்பாக்கத்தில் கடத்தப்பட்ட மாணவி கொடைக்கானலில் மீட்பு- வாலிபர் கைது

Published On 2018-09-21 09:08 GMT   |   Update On 2018-09-21 09:08 GMT
கோடம்பாக்கத்தில் காணாமல் போன மாணவியை கொடைக்கானலில் மீட்ட காவல்துறையினர் இது தொடர்பாக வாலிபரை கைது செய்துள்ளனர்.
போரூர்:

கோடம்பாக்கம் வெள்ளார் தெருவை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் கல்லூரி மாணவியை வடபழனி திருகுமரபுரத்தை சேர்ந்த முஸ்தபா என்பவர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கொடைக்கானலுக்கு சென்று கல்லூரி மாணவியை மீட்டனர். இது தொடர்பாக முஸ்தபா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News