செய்திகள்
காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள்
சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice
சென்னை:
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது. இதனையடுத்து, பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா மற்றும் முதியவர்கள் சிலர் கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்து வந்தனர்.
இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்குவதற்காக ரெயில் பெட்டி வாசலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து கொண்டு, தங்கள் முதுகின் மீது அவரை இறங்குமாறு செய்தனர்.
காவலர்களின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. #TNPolice #ElectricTrain
தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது. இதனையடுத்து, பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா மற்றும் முதியவர்கள் சிலர் கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்து வந்தனர்.
இதையடுத்து, தமிழக காவல் துறையை சேர்ந்த தனசேகரன், மணிகண்டன் ஆகியோர், அமுதா கீழே இறங்குவதற்காக ரெயில் பெட்டி வாசலில் இரு காவலர்களும் படிக்கட்டு போல குனிந்து கொண்டு, தங்கள் முதுகின் மீது அவரை இறங்குமாறு செய்தனர்.
காவலர்களின் இந்த மனித நேயமிக்க செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. #TNPolice #ElectricTrain